நைஜீரியாவிடம் நீண்ட கால கடன் அடிப்படையில் கச்சா எண்ணெய் கேட்டு, கம்மன்பில கலந்துரையாடல்

🕔 December 20, 2021

நைஜீரியாவிடமிருந்து நீண்டகாலக் கடன் அடிப்படையில் கச்சா எண்ணெயைப் பெறுவது தொடர்பாக இன்று இலங்கை கலந்துரையாடியுள்ளது.

எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, இலங்கைக்கான நைஜீரிய உயர்ஸ்தானிகர் அஹமட் சுலேவுடன் இது குறித்து சந்திப்பு நடத்தியுள்ளார்.

இந்த சந்திப்பு தொடர்பில் அமைச்சர் கம்மன்பில தனது ட்விட்டர் பக்கத்தில் படங்களுடன் பதிவொன்றையும் இட்டுள்ளார்.

கச்சா எண்ணெய்யை அதிகளவில் ஏற்றுமதி செய்யும் 10 முன்னணி நாடுகளில் நைஜீரீயாவும் ஒன்றாகும்.

நாடு பொருளாதார நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டிருக்கும் நிலையில், அரபு நாடுகள் பலவற்றிடமும் ஆட்சியாளர்கள் அண்மைக்காலமாக அதிகளவில் உதவிகளை வேண்டிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்