Back to homepage

Tag "ஜனாதிபதி"

ராஜாங்க அமைச்சர்கள் நால்வர் உடனடியாகப் பதவி நீக்கம்: ரணில் அதிரடி

ராஜாங்க அமைச்சர்கள் நால்வர் உடனடியாகப் பதவி நீக்கம்: ரணில் அதிரடி 0

🕔5.Sep 2024

ராஜாங்க அமைச்சர்கள் நால்வரை – அவர்களின் பதவிகளிலிருந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உடனடியாக நீக்கியுள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ராஜாங்க அமைச்சர்களான பிரேமலால் ஜயசேகர (துறைமுக மற்றும் விமான சேவைகள்), இந்திக்க அனுருத்த (மின்சக்தி மற்றும் எரிசக்தி), மொஹான் பிரியதர்ஷன டி சில்வா (விவசாயம்) மற்றும் சிறிபால கம்லத் (நெடுஞ்சாலைகள்) ஆகியோர் உடனடியாக

மேலும்...
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு 0

🕔3.Sep 2024

அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை 2025 ஜனவரி 01ஆம் திகதி முதல் அதிகரிப்பதற்கான பரிந்துரைகளை உள்ளடக்கிய நிபுணர் குழுவின் இறுதி அறிக்கை, குழுவின் தலைவர் உதய ஆர். செனவிரத்ன மற்றும் ஏனைய குழு உறுப்பினர்களினால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இன்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது. இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும்

மேலும்...
ரணில் வெற்றி பெற்றால், தினேஷ் தொடர்ந்தும் பிரதமராக பதவி வகிப்பார்

ரணில் வெற்றி பெற்றால், தினேஷ் தொடர்ந்தும் பிரதமராக பதவி வகிப்பார் 0

🕔22.Aug 2024

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி வெற்றி பெற்றால், தினேஷ் குணவர்தனவே தொடர்ந்தும் பிரதமராக பதவி வகிப்பார் என, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். 1982 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஜே.ஆர். ஜெயவர்தன வெற்றிபெற்ற போது, ​​அப்போது பிரதமராகவிருநத ரணசிங்க பிரேமதாசவே – தொடர்ந்தும் அந்தப் பதவியை வகித்தார் எனவும்

மேலும்...
27X5 அங்குலம்: வரலாற்றில் நீளமான வாக்குச் சீட்டை சந்திக்கும் தேர்தல்

27X5 அங்குலம்: வரலாற்றில் நீளமான வாக்குச் சீட்டை சந்திக்கும் தேர்தல் 0

🕔16.Aug 2024

ஜனாதிபதி தேர்தலில் 39 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், வாக்குச் சீட்டு 27 அங்குல நீளமும் ஐந்து அங்குல அகலமும் கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் வாக்குச் சீட்டு – ஒற்றை வரிசையா அல்லது இரட்டை வரிசையா என்பதை தேர்தல் ஆணைக்குழுவே தீர்மானிக்க வேண்டும் என்று – அரசாங்க அச்சகத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இரட்டை

மேலும்...
பதில் பொலிஸ் மா அதிபரை நியமிப்பதற்கு ஜனாதிபதியால் முடியாது: பிரதமர் தெரிவிப்பு

பதில் பொலிஸ் மா அதிபரை நியமிப்பதற்கு ஜனாதிபதியால் முடியாது: பிரதமர் தெரிவிப்பு 0

🕔26.Jul 2024

பதில் பொலிஸ் மா அதிபரை நியமிப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் ஜனாதிபதியிடம் தற்போது இல்லை என – பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (26) விசேட உரையாற்றிய பிரதமர், பொலிஸ் மா அதிபரின் பதவி தற்போதைக்கு வெற்றிடமாகவில்லை எனவும் கூறினார். தேசபந்து தென்னகோன் – பொலிஸ் மா அதிபராக கடமையாற்றுவதற்கு நேற்று முன்தினம் தொடக்கம்

மேலும்...
ரணிலுக்கு ஆதரவு வழங்கியமைக்கு கிடைத்த பரிசு, பொதுஜன பெரமுனவை அவர் பிளவுபடுத்தியமைதான்: நாமல் ராஜபக்ஷ

ரணிலுக்கு ஆதரவு வழங்கியமைக்கு கிடைத்த பரிசு, பொதுஜன பெரமுனவை அவர் பிளவுபடுத்தியமைதான்: நாமல் ராஜபக்ஷ 0

🕔25.Jul 2024

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க – பொதுஜன பெரமுன கட்சியை பிளவுபடுத்தி விட்டதாக, அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமங்கவை முழுமையாக ஆதரித்தமைக்காக, தங்கள் கட்சிக்கு வழங்கப்பட்ட பெரிய பரிசு, அவர் தமது கட்சியைப் பிளவுபடுத்தியமைதான் எனவும் அவர் கூறியுள்ளார். அரசாங்கத்தை அமைப்பதற்கு ரணில் விக்ரமசிங்கவை அழைக்க, 2022ஆம் ஆண்டு

மேலும்...
ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு இடைக்கால தடை உத்தரவைக் கோரிய மனு தள்ளுபடி

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு இடைக்கால தடை உத்தரவைக் கோரிய மனு தள்ளுபடி 0

🕔8.Jul 2024

ஜனாதிபதித் தேர்ததலை நடத்துவதற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோருமாறு தொழிலதிபர் சி.டி. லெனாவ என்பவர் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்த மனு மீதான தீர்ப்பை இன்று (08) வழங்கியது. அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டத்தின் ஓரிடத்தில்

மேலும்...
ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பில், உச்ச நீதிமன்றுக்கு சட்ட மா அதிபர் அறிவிப்பு

ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பில், உச்ச நீதிமன்றுக்கு சட்ட மா அதிபர் அறிவிப்பு 0

🕔8.Jul 2024

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியின் பதவிக்காலம் 05 வருடங்கள் என்பது தெளிவாக உள்ளதாக சட்டமா அதிபர் உச்ச நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார். ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பான மனு இன்று (08) அழைக்கப்பட்ட போதே, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கனிஷ்க டி சில்வா இதனைக் கூறினார். மேலும் சம்பந்தப்பட்ட மனுவை தள்ளுபடி செய்யக் கோரி

மேலும்...
ரணிலுக்கு ஆதரவளிப்பதாக பசில் ராஜபக்ஷ தெரிவிப்பு

ரணிலுக்கு ஆதரவளிப்பதாக பசில் ராஜபக்ஷ தெரிவிப்பு 0

🕔7.Jul 2024

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமக்கு பயமுமில்லை என்றும், அவரிடம் தாங்கள் கடன்படவில்லை எனவும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். களுத்துறையில் நேற்று (06) நடைபெற்ற நிகழ்வொன்றில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் அந்த நிகழ்வுக்கு சமூகமளித்திருந்த நிலையில் இதனை தெரிவிதார். பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜி.எல். பீரிஸ் கட்சியை விட்டும் விலகிய போதிலும்,

மேலும்...
ஈரான் ஜனாதிபதி தேர்தலில், மேற்கத்திய நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளுக்கு தயார் என அறிவித்துள்ள, டொக்டர் மசூத் பெசெஷ்கியன் வெற்றி

ஈரான் ஜனாதிபதி தேர்தலில், மேற்கத்திய நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளுக்கு தயார் என அறிவித்துள்ள, டொக்டர் மசூத் பெசெஷ்கியன் வெற்றி 0

🕔6.Jul 2024

ஈரானின் புதிய ஜனாதிபதியாக டொக்டர் மசூத் பெசெஷ்கியன் (Masoud Pezeshkian) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எண்ணப்பட்ட 03 கோடிக்கும் அதிகமான வாக்குகளில் மசூத் பெசெஷ்கியன் 53.3% வாக்குகளை பெற்றுள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட சயீத் ஜலீலியை 44.3% வாக்குகளைப் பெற்றுள்ளார். ஜூன் 28 அன்று நடந்த முதல் சுற்று வாக்களிப்பில், எந்தவொரு வேட்பாளரும் பெரும்பான்மை பெறாத நிலையில் –

மேலும்...
ஆசிரியருக்கும் ராணுவ அதிகாரிக்கும் வித்தியாசம் உண்டு: ஜனாதிபதி ரணில் விளக்கம்

ஆசிரியருக்கும் ராணுவ அதிகாரிக்கும் வித்தியாசம் உண்டு: ஜனாதிபதி ரணில் விளக்கம் 0

🕔3.Jul 2024

ஆசிரியர் பணியில் இணைந்துகொள்ளும் அனைவரும் எதிர்கால சந்ததியினருக்காக தமது சேவைகளை அர்ப்பணிக்க வேண்டுமெனவும், ஒழுக்கமின்றி ஒரு நாட்டில் கல்வியைப் பேண முடியாது எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார். முற்பகல் 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாடசாலைக் கல்வியை சீர்குலைக்க எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என்று கூறிய ஜனாதிபதி, இது

மேலும்...
ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி மனுத் தாக்கல்

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி மனுத் தாக்கல் 0

🕔3.Jul 2024

தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் – அரசியலமைப்பின் பிரகாரம் விளக்கமளிக்குமாறு கோரி உச்ச நீதிமன்றில் மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விளக்கம் வழங்கப்படும் வரை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்குமாறும் கோரப்பட்டுள்ளது. இந்த மனுவை தொழிலதிபர் சி.டி. லெனவ என்பவர் தாக்கல் செய்துள்ளார். தற்போதைய ஜனாதிபதியின் சரியான பதவிக் காலத்தை நீதிமன்றம்

மேலும்...
ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு ஆதரவு: பிள்ளையான் தெரிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு ஆதரவு: பிள்ளையான் தெரிவிப்பு 0

🕔22.Jun 2024

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தமது கட்சி ஆதரவளிக்கவுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், ராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (22)

மேலும்...
சியோன் தேவாலயத்தின் திருத்தப் பணிகளை, ஜனாதிபதி நிதியிலிருந்து மேற்கொள்ளுமாறு, ரணில் உத்தரவு

சியோன் தேவாலயத்தின் திருத்தப் பணிகளை, ஜனாதிபதி நிதியிலிருந்து மேற்கொள்ளுமாறு, ரணில் உத்தரவு 0

🕔22.Jun 2024

ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதலுக்கு உள்ளான மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தின் புனரமைப்புப் பணிகளை ஆராய – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (22) முற்பகல் அங்கு விஜயம் செய்தார். தேவாலயத்திற்கு சென்ற ஜனாதிபதி, தேவாலயத்தின் பிரதான போதகர் ரொஷான் மகேசனுடன் கலந்துரையாடினார். தேவாலயத்தின் புனரமைப்புப் பணிகள் இதுவரை ஏன் நிறைவடையவில்லை என்பது தொடர்பில் கேட்டறிந்த ஜனாதிபதி

மேலும்...
06 பெண்கள் உட்பட 289 சிறைக் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு

06 பெண்கள் உட்பட 289 சிறைக் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு 0

🕔21.Jun 2024

சிறைத்தண்டனை அனுபவித்து வந்த 289 கைதிகள் இன்று (ஜூன் 21) விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பொசன் போயா தினத்தையொட்டி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப்பட்ட விசேட அரச மன்னிப்பின் கீழ் நாடளாவிய ரீதியில், இவ்வாறு கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அரசியலமைப்பின் 34வது சரத்தின் பிரகாரம், சிறு குற்றங்களுக்காக தண்டனை அனுபவித்து வந்த 263 ஆண் கைதிகளுக்கும், 06

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்