லஞ்சம் பெற்ற அதிபர் கைது

லஞ்சம் பெற்ற அதிபர் கைது 0

🕔24.Feb 2016

தரம் 06 வகுப்பில் பிள்ளையொன்றை சேர்ப்பதற்காக 50 ஆயிரம் ரூபாவினை லஞ்சமாகப் பெற்ற, நிட்டம்புவ சங்கபோதி வித்தியாலய அதிபர் இன்று புதன்கிழமை லஞ்ச ஊழல்கள் ஆணைக்குழவினரால் கைது செய்யப்பட்டார். பாடசாலை அலுவலகத்தில் வைத்து அதிபர் கைது செய்யப்பட்டதாக, லஞ்ச ஊழல்கள் ஆணைக்குழுவின் விசாரணைப் பிரிவுப் பணிப்பாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த சந்ரசிறிச தெரிவித்தார். குறித்த

மேலும்...
நாட்டுச் சட்டம் பற்றிய அறிவை பிக்குகளுக்கு வழங்குமாறு, ஞானசாரர் கோரிக்கை

நாட்டுச் சட்டம் பற்றிய அறிவை பிக்குகளுக்கு வழங்குமாறு, ஞானசாரர் கோரிக்கை 0

🕔24.Feb 2016

பௌத்த பிக்குகளுக்கு நாட்டின் சட்டங்கள் தொடர்பான அறிவினை வழங்குமாறு, பொது பல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த அவர், நேற்றைய தினம் பிணையில் விடுதலை செய்யப்பட்டமையினை அடுத்து, ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டபோதே, மேற்கண்ட விடயத்தினைக் கூறினார். காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட வழங்கின் சாட்யாளரான எக்னலிகொடவின் மனைவியை,

மேலும்...
ஊடகவியலாளர் எக்னலிகொட கொலை முயற்சி: ஒலி நாடாக்கள் சாட்சியங்களாகின

ஊடகவியலாளர் எக்னலிகொட கொலை முயற்சி: ஒலி நாடாக்கள் சாட்சியங்களாகின 0

🕔24.Feb 2016

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை கொலை செய்வதற்கு திட்டமிட்டமைக்கான சாட்சியங்கள், ஒலி நாடா ஒன்றிலிருந்து கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த ஒலி நாடாவினை நேற்று செவ்வாய்கிழமை ஹோமாகம நீதவான் நீதிமன்றில் புலாய்வுப் பிரிவினர் ஒப்படைத்தனர்.கிரித்தலே முகாமில் கடமையாற்றிய ராணுவ உத்தியோகத்தர்கள் கொலை தொடர்பில் திட்டமிட்டமை, ஒலிப்பதிவு நடா மூலம் தெரியவந்துள்ளது.முதல் ஒலி நாடாவிலேயே எக்னெலிகொட கொலை முயற்சி குறித்த

மேலும்...
கிறிக்கட் மைதானத்தில், திருமண நிகழ்வுகள்: விளையாட்டுத்துறை அமைச்சர் தகவல்

கிறிக்கட் மைதானத்தில், திருமண நிகழ்வுகள்: விளையாட்டுத்துறை அமைச்சர் தகவல் 0

🕔24.Feb 2016

ஹம்பாந்தோட்ட சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிறிக்கட் அரங்கு, திருமண நிகழ்வுகளை நடத்தும் வகையில் வாடகைக்கு விடப்படுவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர  நேற்று செவ்வாய்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானகே எழுப்பிய வாய்மொழி மூலமான கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் கூறினார். சுமார் 4.2 பில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்த மைதானத்தில்

மேலும்...
ஞானசார தேரர் பிணையில் விடுதலை; சாட்சிகளை அச்சுறுத்தக் கூடாது எனவும் உத்தரவு

ஞானசார தேரர் பிணையில் விடுதலை; சாட்சிகளை அச்சுறுத்தக் கூடாது எனவும் உத்தரவு 0

🕔23.Feb 2016

பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட ஞானசார தேரர் இன்று செவ்வாய்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஞானசார தேரரை 02 லட்சம் ரூபாய் பெறுமதியான ஆட்பிணையில் விடுவிக்குமாறு, ஹோமாகம நீதவான் நீதிமன்ற நீதிபதி ரங்க திஸாநாயக்க உத்தரவிட்டார். இதேவேளை, ஞானசாரர் – சாட்சிகளை அச்சுறுத்தக் கூடாது என்றும் இதன்போது நீதவான் உத்தரவிட்டார். ஊடகவியலாளர் பிரகீத் என்னலிகொட

மேலும்...
ராஜிதவுக்கு நாளை சத்திர சிகிச்கை; ஊடகங்கள் குறிப்பிடுகின்றமை போல், நிலைமை ஆபத்தில்லை

ராஜிதவுக்கு நாளை சத்திர சிகிச்கை; ஊடகங்கள் குறிப்பிடுகின்றமை போல், நிலைமை ஆபத்தில்லை 0

🕔23.Feb 2016

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு நாளை புதன்கிழமை சத்திரசிகிச்சையொன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சரின் ஊடக செயலாளர் நிபுன் எகநாயக்க தெரிவித்துள்ளார். ஊடக அறிக்கை ஒன்றின் மூலம், இந்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார் சிங்கப்பூரிலுள்ள மௌன்ட் எலிசபத் வைத்தியசாலையில் அமைச்சர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது. ஆயினும், சில ஊடகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளமைபோல் இது ஓர் அவசர சத்திரசிகிச்சையல்ல

மேலும்...
சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தை, மஹிந்தவிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை

சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தை, மஹிந்தவிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை 0

🕔23.Feb 2016

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையளிக்க வேண்டுமென அந்தக் கட்சியின் பிக்குகள் அமைப்பின் தலைவர் ராகவ ஜினரத்ன தேரர் கோரிக்கை விடுத்துள்ளார். ஊடக சந்திப்பொன்றில் இன்று செவ்வாய்கிழமை கலந்து கொண்டு பேசும்போதே அவர் இதனைக் கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், சுயநலன் கொண்ட சிலர் சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்த

மேலும்...
கிராம உத்தியோகத்தர்கள், சமாதான நீதவான்களாக நியமனம்

கிராம உத்தியோகத்தர்கள், சமாதான நீதவான்களாக நியமனம் 0

🕔23.Feb 2016

கிராம உத்தியோகத்தர்கள் அனைவரும், நீதியமைச்சரின் அதிகாரத்துக்கு இணங்க சமாதான நீதவான்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நீதித்துறைச் சட்டத்தில் நீதியமைச்சருக்கு உள்ள அதிகாரத்தின் படி, நாட்டிலுள்ள கிராம உத்தியோகத்தர்கள் அனைவரையும் சமாதான நீதிவான்களாக நியமிக்கும் தீர்மானத்தினை நீதியமைச்சர் மேற்கொண்டுள்ளார்.

மேலும்...
உலகில் அதிக ஆயுதங்களைக் கொள்வனவு செய்யும் நாடுகளின் பட்டியலில் சஊதி முதலிடம்

உலகில் அதிக ஆயுதங்களைக் கொள்வனவு செய்யும் நாடுகளின் பட்டியலில் சஊதி முதலிடம் 0

🕔23.Feb 2016

உலகளவில் அதிக ஆயுதங்களை கொள்வனவு செய்யும் நாடுகள் பட்டியலில் சஊதி அரேபியா முதலாவது இடத்தில் உள்ளது. சுவீடனைச் சேர்ந்த ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி மையம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. உலகில் அதிக ஆயுதங்களை கொள்முதல் செய்யும் நாடுகள் குறித்த பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வருகிறது. மேற்படி சர்வதேச அமைதி ஆராய்ச்சி மையம், கடந்த 2015 ஆம் ஆண்டுக்கான பட்டியலை

மேலும்...
கைது செய்யப்படுவதை தடைசெய்யக் கோரும் பசில் ராஜபக்ஷவின் மனு, விசாரணைக்கு வருகிறது

கைது செய்யப்படுவதை தடைசெய்யக் கோரும் பசில் ராஜபக்ஷவின் மனு, விசாரணைக்கு வருகிறது 0

🕔23.Feb 2016

தன்னைக் கைது செய்யப்படுவதனை தடை செய்யுமாறு உத்தரவிடக் கோரி, முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தாக்கல் செய்திருந்த மனு இன்று செவ்வாய்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.நீதவான் நீதிமன்றில் விசாரணை செய்யப்பட்டு வரும் ஐந்து வழக்குகள் தொடர்பில், நிதி மோசடி விசாரணப் பிரிவினர் தம்மை கைது செய்வதனை தடுக்க, இடைக்கால தடையுத்தரவு விதிக்குமாறு கோரி,

மேலும்...
தலைவர்கள் வெறுமனே பேசிக் கொண்டிருக்கின்றனர்: கோட்டாபய குற்றச்சாட்டு

தலைவர்கள் வெறுமனே பேசிக் கொண்டிருக்கின்றனர்: கோட்டாபய குற்றச்சாட்டு 0

🕔22.Feb 2016

நாட்டுக்கு சிறந்த தலைவர் ஒருவர் இல்லை என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கவலை தெரிவித்துள்ளார். ஹோகந்தர பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் சமய நிகழ்வொன்றின் போது, அவர் இதனைக் கூறினார். நாட்டிலுள்ள தலைவர்கள் வெறுமனே பேசிக் கொண்டிருக்கிறார்களே தவிர, காரியங்கள் எவற்றினையும் ஆற்றவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். இவ்வாறானதொரு நிலையில், பிக்குகள்தான்

மேலும்...
வரலாற்று உண்மைகளை  பஷீர் சேகுதாவூத் திரிபுபடுத்தக் கூடாது: அமான் அஷ்ரப்

வரலாற்று உண்மைகளை பஷீர் சேகுதாவூத் திரிபுபடுத்தக் கூடாது: அமான் அஷ்ரப் 0

🕔22.Feb 2016

முஸ்லிம் காங்கிரசின் மறைந்த ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப், ஒன்றுபட்ட இலங்கை எனும் கொள்கையில் உறுதியாக இருந்தவர் என்றும், பிரிவினையை அவர் ஒருபோதும் ஆதரிக்கவில்லை என்றும், அஷ்ரப்பின் புதல்வர் அமான் அஷ்ரப் தெரிவித்துள்ளார். முஸ்லிம்களுக்கு தனியான மாகாணம் தேவை என்பதை, முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் உறுதிப்படுத்தியிருந்தார் என்று, அந்தக் கட்சியின் தற்போதைய

மேலும்...
முஸ்லிம் மாகாண கோரிக்கையை கைவிட முடியாது:  பஷீர் சேகுதாவூத்

முஸ்லிம் மாகாண கோரிக்கையை கைவிட முடியாது: பஷீர் சேகுதாவூத் 0

🕔22.Feb 2016

தனியான முஸ்லிம் மாகாணம் என்ற கொள்கையை முஸ்லிம்கள் கைவிடமுடியாது என, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். காத்தான்குடியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கருத்தமர்வின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில், புதிய அரசியலமைப்புக்கான யோசனைகளில் இந்த விடயமும் உள்ளடக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழர்களை பொறுத்தவரையில் சுயநிர்ணய உரிமை என்ற விடயத்தை அவர்கள் கைவிடத்

மேலும்...
பதவி இழந்தார் கப்டன்

பதவி இழந்தார் கப்டன் 0

🕔21.Feb 2016

தென்னிந்திய நடிகர் விஜயகாந்த் – இந்தியாவின் தமிழ் நாடு சட்டப் பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழந்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தலைவர் இது குறித்து அறிவித்துள்ளார். விஜயகாந்த் தலைமை வகிக்கும் கட்சியான தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் 08 சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்.எல்.ஏ) , தமது பதவியை ராஜிநாமாச் செய்துள்ளனர். இதன் காரணமாக,  சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் தகுதியை

மேலும்...
அண்ணன் சிறையில், தம்பி பாடல் வெளியீடு: ரோஹித ராஜபக்ஷவின் காதல் சோகம்

அண்ணன் சிறையில், தம்பி பாடல் வெளியீடு: ரோஹித ராஜபக்ஷவின் காதல் சோகம் 0

🕔21.Feb 2016

மஹிந்த ராஜபக்ஷவின் மூன்றாவது புல்வர் ரோஹித ராஜபக்ஷ, பாடலொன்றினைப் பாடி வெளியிட்டுள்ளார். ‘மன்முல வெலா’ எனும் தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த சிங்கள மொழிப் பாடலானது, இழந்து போன காதலின் அவஷ்தையினை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. இந்தப் பாடலின் வரிகளை ரோஹித எழுதியுள்ளதோடு, இதற்கான இசையினையும் அவரே அமைத்துள்ளார். இது அவரின் முதல் பாடலாகும். தற்போது, இந்தப் பாடல்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்