ஹைட்ரஜன் வெடிகுண்டினை ஒருமுறை வீசி, அமெரிக்கா முழுவதையும் அழிக்க முடியும்; வடகொரியா தெரிவிப்பு 0
எதிரி நாடுகளிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காகத்தான் ஹைட்ரஜன் வெடிகுண்டு சோதனையை மேற்கொண்டதாக வடகொரியா அறிவித்துள்ளது. வடகொரியாவின் கொரிய மத்திய செய்தி நிறுவனம் (கே.சி.என்.ஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த அறிவித்தல் வெளியாகியுள்ளது. மேற்படி செய்தி நிறுவனம் மேலும் தெரிவிக்கையில்; “ஏற்கெனவே பல நாடுகள் ஹைட்ரஜன் வெடிகுண்டு சோத னையை வெற்றிகரமாக நடத்தியுள்ள நிலையில், வட கொரியாவின் இந்த சோதனை தவிர்க்க முடியாததாகி விட்டது.