ஹைட்ரஜன் வெடிகுண்டினை ஒருமுறை வீசி, அமெரிக்கா முழுவதையும் அழிக்க முடியும்; வடகொரியா தெரிவிப்பு
எதிரி நாடுகளிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காகத்தான் ஹைட்ரஜன் வெடிகுண்டு சோதனையை மேற்கொண்டதாக வடகொரியா அறிவித்துள்ளது.
வடகொரியாவின் கொரிய மத்திய செய்தி நிறுவனம் (கே.சி.என்.ஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த அறிவித்தல் வெளியாகியுள்ளது.
மேற்படி செய்தி நிறுவனம் மேலும் தெரிவிக்கையில்;
“ஏற்கெனவே பல நாடுகள் ஹைட்ரஜன் வெடிகுண்டு சோத னையை வெற்றிகரமாக நடத்தியுள்ள நிலையில், வட கொரியாவின் இந்த சோதனை தவிர்க்க முடியாததாகி விட்டது.
எந்த ஒரு நாட்டையும் அச்சுறுத்த வேண்டும் அல்லது ஆத்திரமூட்ட வேண்டும் என்ற நோக்கத்துக்காக ஹைட்ரஜன் வெடிகுண்டு சோதனையை நடத்தவில்லை. அதே நேரம், எதிரி நாட்டு படைகளின் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான திறனை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே இந்த சோதனையின் முக்கிய நோக்கமாகும்.
குறிப்பாக சொல்ல வேண்டுமானால், அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தினால் அதற்கு எவ்வாறு பதிலடி கொடுக்கப்படும் என்பதை உணர்த்துவதற்காக, இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த ஹைட்ரஜன் வெடிகுண்டை ஒரு முறை வீசி அமெரிக்கா முழுவதையும் அழிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்”.