Back to homepage

மேல் மாகாணம்

வடக்­குடன் கிழக்கை இணைக்க விட மாட்டோமெனக் கூறி, ஒரே­ய­டி­யாக ஒதுக்­கி­விட முடி­யாது: ஹக்கீம் தெரிவிப்பு

வடக்­குடன் கிழக்கை இணைக்க விட மாட்டோமெனக் கூறி, ஒரே­ய­டி­யாக ஒதுக்­கி­விட முடி­யாது: ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔5.Oct 2017

வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைவு எனும் விடயத்தில் வெட்டொன்று, துண்டிரண்டாக முடிவுகளை எடுக்க முடியாது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார். வடக்­குடன் கிழக்கை இணைக்கவிட மாட்­டோ­மென கூறி சிக்­கலை ஏற்­ப­டுத்த முயற்சிக்கின்ற தரப்­பி­ன­ருக்கு தூப­மி­டு­வ­தற்கு முடி­யாது எனவும் அவர் கூறியுள்ளார். ஊடகமொன்று கருத்து தெரிவிக்கும் போதே, மு.கா. தலைவர்

மேலும்...
கிழக்கு உள்ளிட்ட கலைக்கப்பட்ட மாகாணசபைகளின் 32க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒப்படைக்கப்படவில்லை: கபே தெரிவிப்பு

கிழக்கு உள்ளிட்ட கலைக்கப்பட்ட மாகாணசபைகளின் 32க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒப்படைக்கப்படவில்லை: கபே தெரிவிப்பு 0

🕔5.Oct 2017

கிழக்கு உள்ளிட்ட கலைக்கப்பட்ட மூன்று மாகாண சபைகளுக்குச் சொந்தமான 32 க்கும் அதிகமான வாகனங்களை அந்த சபைகளின் முதலமைச்சர்கள், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் அவர்களின் பணியாளர்கள் எடுத்துச் சென்றுள்ளதாக கபே அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. குறித்த மாகாணசபைகளின் பதவிக் காலங்கள் முடிவுள்ள நிலையில், இவ்வாறு அந்த சபைகளின் வாகனங்களை எடுத்துச் சென்றுள்ளமையானது, சட்ட விரோதமான செயற்பாடாகும்

மேலும்...
இலங்கையில் கைப்பற்றப்பட்ட 930 கிலோகிராம் கொகெய்ன் அழிக்கப்படுகிறது

இலங்கையில் கைப்பற்றப்பட்ட 930 கிலோகிராம் கொகெய்ன் அழிக்கப்படுகிறது 0

🕔4.Oct 2017

இலங்கையில் கைப்பற்றப்பட்ட சுமார் 930 கிலோகிராம் கொகொய்ன் போதைப் பொருளை, பகிரங்கமாக இம்மாதம் அழிக்கவுள்ளதாக விசேட அதிரடிப்படையின் கொமாண்டர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லத்தீப் நேற்று செவ்வாய்கிழமை தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்பின் பேரிலும், சட்ட மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு இணங்கவும் மேற்படி போதைப் பொருள், பகிரங்கமாக அழிக்கப்படவுள்ளது. மேலும்,

மேலும்...
மஹிந்த ராஜபக்ஷவை இகழ்வதாக நினைத்துக் கொண்டு, ராஜித புகழ்ந்து கொண்டிருக்கிறார்: நாமல்

மஹிந்த ராஜபக்ஷவை இகழ்வதாக நினைத்துக் கொண்டு, ராஜித புகழ்ந்து கொண்டிருக்கிறார்: நாமல் 0

🕔3.Oct 2017

ரோஹிங்ய அகதிகள் விடயத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை அமைச்சர் ராஜித சேனாரத்ன இகழ்வதாக நினைத்து புகழ்ந்துள்ளார் என, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.அவருடைய ஊடகப்பிரிவு அனுப்பியுள்ள செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. நாமல் ராஷபக்ஷ மேலும் தெரிவித்துள்ளதாவது;இலங்கையில் மியன்மார் அகதிகள் அச்சுறுத்தப்பட்ட விடயமானது பலத்த பேசு பொருளாகிவுள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த

மேலும்...
அகதிகள் மற்றும் தஞ்சம் கோருவோர் என, நாட்டில் மொத்தம் 1333 பேர் உள்ளனர்: விபரங்களை வெளியிட்டார் அமைச்சர் சமரசிங்க

அகதிகள் மற்றும் தஞ்சம் கோருவோர் என, நாட்டில் மொத்தம் 1333 பேர் உள்ளனர்: விபரங்களை வெளியிட்டார் அமைச்சர் சமரசிங்க 0

🕔3.Oct 2017

இலங்கையிலுள்ள ரோஹிங்ய அகதிகளை மூன்றாவது நாடொன்று அனுப்பி விடுமாறு சிலர் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இலங்கையில் தஞ்சம் கோருவோர் மற்றும் அகதிகள் என, மொத்தம் 1333 பேர் உள்ளனர் என்று அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான ஆணையாளரின் பாதுகாப்பின் கீழ் இவர்கள் நாட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறினார்.

மேலும்...
500 பேருக்கு தொழில் வாய்ப்பு உள்ளது; கனிய மணல் கூட்டுத்தாபன ஊழியர்களிடம் அமைச்சர் றிசாத் நம்பிக்கை

500 பேருக்கு தொழில் வாய்ப்பு உள்ளது; கனிய மணல் கூட்டுத்தாபன ஊழியர்களிடம் அமைச்சர் றிசாத் நம்பிக்கை 0

🕔3.Oct 2017

புல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபனத்தினுடைய நான்கு தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனைச் சந்தித்து, கூட்டுத்தாபனத்தின் முன்னேற்றங்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தினர். கடந்த அரசாங்க காலத்திலிருந்து தற்காலிகமாக பணிபுரிந்த தொழிலாளர்களுக்கும், இந்த ஆட்சியில் அமைச்சரால் தொழில் வழங்கப்பட்டவர்களுக்கும்,  நிரந்தர நியமனங்களை வழங்கியமைக்கு நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவிப்பதாக இதன்போது கூறினர்.

மேலும்...
ரோஹிங்ய அகதிகள் விவகாரம்; பொலிஸார் நடந்து கொண்ட விதம் தொடர்பில் திருப்தியில்லை: அமைச்சர் சாகல

ரோஹிங்ய அகதிகள் விவகாரம்; பொலிஸார் நடந்து கொண்ட விதம் தொடர்பில் திருப்தியில்லை: அமைச்சர் சாகல 0

🕔3.Oct 2017

கல்கிசை பகுதியில் ரோஹிங்ய அகதிகள் தங்கியிருந்த இடத்தில் பிக்குகள் உள்ளிட்ட குழுவின் குழப்பம் விளைவித்தபோது, பொலிஸார் நடந்து கொண்ட விதம் தொடர்பில் தனக்கு திருப்தியில்லை என்று, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். குறித்த பிராந்தியத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரை அலறி மாளிகையில் சந்தித்தபோதே,

மேலும்...
புதிய அரசியலமைப்பின் ஊடாக, சமஷ்டி நாடாக இலங்கையை மாற்றவுள்ளனர்: விமல் குற்றச்சாட்டு

புதிய அரசியலமைப்பின் ஊடாக, சமஷ்டி நாடாக இலங்கையை மாற்றவுள்ளனர்: விமல் குற்றச்சாட்டு 0

🕔2.Oct 2017

புதிய அரசியலமைப்பின் ஊடாக நாட்டில் சமஷ்டி ஆட்சி முறைமையொன்று அமுலுக்கு வரவுள்ளது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய அரசியலமைப்புக்கான வரைவில், ஒருமித்த நாடு என்று தமிழ் மொழியில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொஸ்கமுவ பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே, நாடாளுமன்ற

மேலும்...
அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட நால்வருக்கு, வெளிநாடு செல்லத் தடை

அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட நால்வருக்கு, வெளிநாடு செல்லத் தடை 0

🕔2.Oct 2017

மத்திய வங்கி பிணை முறி விவகாரத்துடன் தொடர்புபட்ட பெர்ப்பச்சுவல் பங்கு தரகு நிறுவனத்தின் தலைவர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் அந் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் கசுன் பலிசேன உள்ளிட்ட 04 பேருக்கு, வெளிநாடு செல்வதற்கு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோட்டே நீதிவான் நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று திங்கட்கிழமை பிறப்பித்துள்ளது. மத்திய வங்கி பிணை

மேலும்...
கரையோர மாவட்ட முன்மொழிவுகளை, இடைக்கால அறிக்கைக்கு மு.கா. சமர்ப்பிக்கவில்லை: ஜயம்பதி விக்ரமரட்ன

கரையோர மாவட்ட முன்மொழிவுகளை, இடைக்கால அறிக்கைக்கு மு.கா. சமர்ப்பிக்கவில்லை: ஜயம்பதி விக்ரமரட்ன 0

🕔2.Oct 2017

– மப்றூக், றிசாத் ஏ காதர் – அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கையில் உள்ளடக்கும் பொருட்டு, கரையோர மாவட்டம் தொடர்பான எவ்வித முன்மொழிவினையும் முஸ்லிம் காங்கிரஸ் சமர்ப்பிக்கவில்லை என்று, அரசியலமைப்பு சபையினுடைய வழிப்படுத்தும் குழுவின் அங்கத்தவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ன ‘புதிது’ இணையத்தளத்துக்குத் தெரிவித்தார். கரையோர மாவட்டம் தொடர்பான முன்மொழிவினை அரசியலமைப்பு சபைக்கு தாம்

மேலும்...
ரோஹிங்ய அகதிகளிடம் குழப்பம் விளைவித்த அக்மீமன தேரருக்கு விளக்க மறியல்;

ரோஹிங்ய அகதிகளிடம் குழப்பம் விளைவித்த அக்மீமன தேரருக்கு விளக்க மறியல்; 0

🕔2.Oct 2017

கல்கிசை பகுதியில் ரோஹிங்ய முஸ்லிம்கள் தங்க வைக்கப்பட்டிருந்த வீட்டுக்குச் சென்று குழப்பம் விளைவித்த சிங்கள ராவய அமைப்பைச் சேர்ந்த அக்மீமன தயாரட்ன தேரரை, எதிர்வரும் 09ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு, கல்கிசை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரோஹிங்ய அகதிகள் தங்கியிருந்த இடத்தில் குழப்பம் விளைவித்தமை தொடர்பில், வாக்குமூலமொன்றினை வழங்குவதற்காக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு

மேலும்...
புதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சியை மேலும் வலுப்படுத்தும்: ஜயம்பதி விக்ரமரட்ண

புதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சியை மேலும் வலுப்படுத்தும்: ஜயம்பதி விக்ரமரட்ண 0

🕔2.Oct 2017

ஒற்றையாட்சி முறைமையை புதிய அரசியலமைப்பு எந்த விதத்திலும் பாதிக்காது என்று, அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் அங்கத்தவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ண தெரிவித்துள்ளார். மேலும், சமஷ்டி வழி முறைக்கும் புதிய அரசியலமைப்பு, வழி வகுக்காது எனவும் அவர் கூறினார். பௌத்த மதத்துக்குக்கு தற்போதைய அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவம், புதிய அரசியலமைப்பில் பாதிப்புக்குள்ளாகாது எனவும் அவர்

மேலும்...
ரோஹிங்ய அகதிகளிடம் பிரச்சினை ஏற்படுத்திய காவாலி டான் பிரசாத் உள்ளிட்ட ஐவருக்கு விளக்க மறியல்

ரோஹிங்ய அகதிகளிடம் பிரச்சினை ஏற்படுத்திய காவாலி டான் பிரசாத் உள்ளிட்ட ஐவருக்கு விளக்க மறியல் 0

🕔1.Oct 2017

ரோஹிங்ய அகதிகளை கல்கிசை பகுதியில் வைத்து அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட டான் பிரசாத் எனும் காவாலி உள்ளிட்டோரை விளக்க மறியலில் வைக்குமாறு கல்கிசை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐக்கி நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தின் மேற்பார்வையின் கீழ், ரோஹிங்ய அகதிகள் தங்கியிருந்த வீட்டினை முற்றுகையிட்ட பிக்குகள் உள்ளிட்ட பலர், அங்கு குழப்ப நிலையை ஏற்படுத்தியிருந்தனர்.

மேலும்...
மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்டத்தில் பல குறைபாடுகள் உள்ளன: தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்

மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்டத்தில் பல குறைபாடுகள் உள்ளன: தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் 0

🕔1.Oct 2017

மாகாணசபை தேர்தல் சட்டமூலம் வரையப்பட்டபோது, தேர்தல் ஆணைக்குழு ஓரங்கட்டப்பட்டதாக, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், புதிய தேர்தல் சட்டமொன்றை வரையும்போது,  தேர்தல் ஆணையாளரை அல்லது ஆணைக்குழுவை அணுகி ஆலோசனை பெற்றிருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும்...
ரோஹிங்ய அகதிகள் விவகாரத்தை மனிதாபிமானத்துடன் கையாளுமாறு, பொதுபலசேனா வேண்டுகோள்

ரோஹிங்ய அகதிகள் விவகாரத்தை மனிதாபிமானத்துடன் கையாளுமாறு, பொதுபலசேனா வேண்டுகோள் 0

🕔30.Sep 2017

இலங்கையில் தங்க வைக்கப்பட்டிருக்கும் ரோஹிங்ய அகதிகள் விவகாரத்தினை மனிதாபிமானத்துடன் கையாளுமாறு, பொதுபலசேனா அமைப்பு, அனைத்து இலங்கயைர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இன்று சனிக்கிழமை அந்த அமைப்பு விடுத்துள்ள விசேட அறிக்கையொன்றிலேயே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது. ரோஹிங்ய அகதிகள் விவகாரம், பௌத்த கண்ணோட்டத்தினூடாகப் பார்க்கப்பட வேண்டுமெனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. பொதுபலசேனா அமைப்பின் அனைத்து உத்தியோகபூர்வ சமூக வலைத்தளங்களிலும்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்