Back to homepage

பிரதான செய்திகள்

புதிய அரசியல் யாப்பு தொடர்பில், மகாநாயக்கர்களின் யோசனை பெறப்படும்: ஜனாதிபதி உத்தரவாதம்

புதிய அரசியல் யாப்பு தொடர்பில், மகாநாயக்கர்களின் யோசனை பெறப்படும்: ஜனாதிபதி உத்தரவாதம் 0

🕔6.Jul 2017

புதிய அரசியலமைப்பு தொடர்பில் பௌத்த மகாநாயக்கர்களின் கருத்துக்கள் பெறப்படும் என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பௌத்த மாநாயக்க தேரர்கள் உட்பட மகா சங்க சபையினரை கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி சந்தித்தார். இதன்போதே மேற்படி விடயத்தினை அவர் கூறினார். இதேவேளை, புதிய அரசியலமைப்பு தொடர்பில், இறுதி ஆவணங்கள் எவையும் இதுவரை தயாரிக்கப்படவில்லை

மேலும்...
மாட்டிறைச்சிக்கு நிர்ணய விலை; கிண்ணியா நகர சபை அதிரடி; ஏனையவர்களும் முயற்சியுங்கள்

மாட்டிறைச்சிக்கு நிர்ணய விலை; கிண்ணியா நகர சபை அதிரடி; ஏனையவர்களும் முயற்சியுங்கள் 0

🕔6.Jul 2017

– றிசாத் ஏ காதர் –மாட்டிறைச்சி ஒரு கிலோ 1000 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகின்ற நிலையில், அதற்கான உச்ச விலையாக 605 ரூபாவினை கிண்ணியா நகர சபை நிர்ணயத்துள்ளது.கிண்ணியா நகர சபையின் செயலாளர் எம்.ஜே.எம். அன்வர் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள கடித்துக்கு அமைவாக, இந்த இம்மாதம் முதலாம் திகதியிலிருந்து இந்த நிர்ணய விலை அமுலாக்கப்பட்டுள்ளது.இதற்கிணங்க, ஒரு கிலோ தனி

மேலும்...
பொய்யான உறுதிப்படுத்தல் கடிதம் வழங்கிய அதிபர், வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு எதிராக நடவடிக்கை

பொய்யான உறுதிப்படுத்தல் கடிதம் வழங்கிய அதிபர், வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு எதிராக நடவடிக்கை 0

🕔6.Jul 2017

தொண்­டர் ஆசி­ரி­யர்­க­ளா­கக் கடமையாற்றா­த­வர்­களுக்கு, தொண்­டர் ஆசிரியர்களாகக் கட­மை­யாற்­றுகின்றனர் என்று, பொய்யான உறு­திப்படுத்தல் கடிதம் வழங்­கிய, பாட­சா­லை­க­ளின் அதி­பர்­க­ளும் அதனை உறுதிப்படுத்திய­ வ­ல­யக் கல்­விப் பணிப்­பா­ளர்­க­ளும் விசா­ர­ணைகளுக்கு உட்படுத்தப்­ப­ட­வுள்­ளனர் என்று கல்வி அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.விரை­வில் இந்த விசா­ரணைகள் நடத்­தப்­ப­டும் என்று  மாகாணக் கல்வி அமைச்­சு வட்டாரங்களில் இருந்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.தகு­தி­யற்ற தொண்­டர்­ ஆசிரியர்களுக்கு உறு­திப்­ப­டுத்­தல்

மேலும்...
நிதி குற்றப் புலனாய்வு பிரிவு தொடர்பில் ஜனாதிபதி அதிருப்தி; அமைச்சர் ராஜித தெரிவிப்பு

நிதி குற்றப் புலனாய்வு பிரிவு தொடர்பில் ஜனாதிபதி அதிருப்தி; அமைச்சர் ராஜித தெரிவிப்பு 0

🕔6.Jul 2017

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வரும் மந்தமான விசாரணைகள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி, பிரதம மந்திரி மற்றும் அமைச்சர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர் என்று, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று புதன்கிழமை நடைபெற்ற போதே, அவர் இதனைக் கூறினார். இது தொடர்பில்

மேலும்...
ஆளுநர் பதவி கிடைக்காத ஏமாற்றம்; தூதுவர் பதவி வேண்டாம் என்கிறார் லியனகே

ஆளுநர் பதவி கிடைக்காத ஏமாற்றம்; தூதுவர் பதவி வேண்டாம் என்கிறார் லியனகே 0

🕔5.Jul 2017

கட்டாருக்கான இலங்கைத் தூதுவரும், கிழக்கு மாகாணத்துக்கான ஆளுநர் பதவியினை எதிர்பார்த்திருந்தவருமான ஏ.எஸ்.பி. லியனகே, மிகவும் ஏமாந்த நிலையில், தனது பதவியினை ராஜிநாமாச் செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். கொழும்பில் அமைந்துள்ள அவரின் பீக்கொக் மாளிகையில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் இதனைக் கூறினார். பிரபல வர்த்தகரான இவர், ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சியின் தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும்...
தேர்­தல்கள் ஆணை­யாளர் நெகிழ்வுப் போக்கை கடைப்பிடிக்க வேண்டும்: ரவூப் ஹக்கீம் வேண்டுகோள்

தேர்­தல்கள் ஆணை­யாளர் நெகிழ்வுப் போக்கை கடைப்பிடிக்க வேண்டும்: ரவூப் ஹக்கீம் வேண்டுகோள் 0

🕔5.Jul 2017

– பிறவ்ஸ் –இடம்பெயர்ந்து வெளிமாவட்டங்களில் தங்கியிருக்கும் வாக்காளர்கள், தங்­க­ளுடைய சொந்த மாவட்டத்தில் வாக்களிக்கும் உரிமை தொடர்பில், தேர்­தல்கள் ஆணை­யாளர் நெகிழ்வுப் போக்கை கடைப்பிடிக்க வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் வேண்டுகோள் விடுத்தார்.இடம்­பெ­யர்ந்­த­வர்­களின் வாக்­க­ளிப்புக்குரிய “தற்­கா­லிக சட்ட ஏற்­பா­டு­க­ளுக்­கான சட்ட­மூ­லம்” தொடர்பில் நேற்று செவ்வாய்கிழமை நாடா­ளு­மன்­றத்தில் இடம்­பெற்ற விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே, அமைச்சர் இதனைக்

மேலும்...
மனிதர்களுக்கு நடத்துவது போல், பிரதி அமைச்சருடைய நாய்க்கு இறுதிச் சடங்கு: களனியில்

மனிதர்களுக்கு நடத்துவது போல், பிரதி அமைச்சருடைய நாய்க்கு இறுதிச் சடங்கு: களனியில் 0

🕔5.Jul 2017

மனிதர்களின் இறுதிச் சடங்கு போல், பிரதியமைச்சர் ஒருவருடைய நாயின் இறுதிச் சடங்கு, களனிப் பிரதேசத்தில் நடைபெற்றது. இளைஞர் நாடாளுமன்றத்தின் பிரதி பிரதம மந்திரி மலித் சுதுசிங்க என்பவரின் நாயினுடைய இறுதிச் சடங்கே இவ்வாறு நடைபெற்றது. மிஷல் எனும் பெயருடைய பிரதியமைச்சரின் நாய் இறக்கும் போது, அதற்கு வயது 06 ஆகும். எதிர்வரும் நொவம்பர் மாதம் 20ஆம் திகதி,

மேலும்...
குளிர்ப் பிரதேசத்தில் காய்த்துக் குலுங்கும் ஈச்சை; நுவரெலியாவில் அதிசயம்

குளிர்ப் பிரதேசத்தில் காய்த்துக் குலுங்கும் ஈச்சை; நுவரெலியாவில் அதிசயம் 0

🕔5.Jul 2017

– க. கிஷாந்தன் – தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் நடப்பட்ட ஈச்சை மரமொன்று, 35 வருடங்களுக்குப் பின்னர் காய்த்து – கனி தந்துள்ளது. வெப்பமான காலநிலை நிலவும் பிரதேசங்களிலேயே வளரும் என்று நம்பப்பட்ட ஈச்சை மரமானது, அதிக குளிர் பிரதேசமான நுவரெலியா மாவட்டத்தின் – தலவாக்கலை பகுதியில் இவ்வாறு காய்த்து – கனி தந்துள்ளமையானது ஆச்சரியமானதாகும். தலவாக்கலை

மேலும்...
அரசியலமைப்பினை உருவாக்கியது, வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பதற்கல்ல; மகாநாயக்கர்களின் முடிவுக்கு ராஜித பலதிடி

அரசியலமைப்பினை உருவாக்கியது, வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பதற்கல்ல; மகாநாயக்கர்களின் முடிவுக்கு ராஜித பலதிடி 0

🕔5.Jul 2017

புதிய அரசியலமைப்பினை உருவாக்கியது வௌியிடுவதற்கே அன்றி, வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பதற்காக அல்ல என்று, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்பு அவசியமற்றது என, நேற்றைய தினம் அஸ்கிரிய பீடத்தில் கூடிய மகாநாயக்கர்கள் தீர்மானமொன்றினை மேற்கொண்டிருந்த நிலையிலேயே, அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார். இதேவேளை, அரசியலமைப்புச் சபையின் நடவடிக்கைகள் முன்னோக்கி எடுத்துச் செல்லப்படும் எனவும் அவர் கூறினார். 62

மேலும்...
ஜி.எஸ்.பி. பிளஸ் மூலம், ஏற்றுமதி வருமானம் 30 சத வீதத்தினால் அதிகரிக்கும்;அமைச்சர் றிசாட் தெரிவிப்பு

ஜி.எஸ்.பி. பிளஸ் மூலம், ஏற்றுமதி வருமானம் 30 சத வீதத்தினால் அதிகரிக்கும்;அமைச்சர் றிசாட் தெரிவிப்பு 0

🕔5.Jul 2017

ஜரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையின் மூலம் இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 30 சத வீதத்தினால் அதிகரிக்கும் என்று, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அதேவேளை வெளிநாட்டு நேரடி முதலீட்டின் மூலம் கிடைக்கும் வருமானம் 213 சத வீதத்தினால் அதிகரிக்கும் சாத்தியம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். புதுடில்லியை தளமாகக் கொண்டு இயங்கிவரும், டூனிசிய நாட்டின்

மேலும்...
வடக்கு – கிழக்கு இணைப்பா? அப்படி நான் கூறவில்லை: மறுக்கிறார் ஹசனலி

வடக்கு – கிழக்கு இணைப்பா? அப்படி நான் கூறவில்லை: மறுக்கிறார் ஹசனலி 0

🕔4.Jul 2017

“இணைந்த வடகிழக்கு மாகாணமே, புதிய முஸ்லிம் கூட்டணியின் இலக்கு” என்று, தான்தெரிவித்ததாக, இன்றைய தமிழ் பத்திரிகையொன்றில் வெளியான செய்தியினை, முஸ்லிம் கூட்டணியின் பிரதான பங்காளரும், முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் செயலாளருமான எம்.ரி. ஹசனலி  மறுத்துள்ளார். வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைய வேண்டுமென, தான் ஒருபோதும் கூறவில்லை என்றும் அவர் தெரிவித்தார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாண

மேலும்...
கருணை மனதை, அதிகம் வெளிப்படுத்திய ஐ.தே.கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்

கருணை மனதை, அதிகம் வெளிப்படுத்திய ஐ.தே.கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 0

🕔4.Jul 2017

நாடாளுமன்ற உறுப்பினர்களில் 95 பேர், தங்களின் ஒரு மாத சம்பளத்தினை, அண்மையில் ஏற்பட்ட வெள்ள நிராணப் பணிகளுக்காக வழங்கியுள்ளனர். இவ்வாறு தமது மாத சம்பளத்தை பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்கியவர்களில் 63 பேர் ஐ.தே.கட்சிக்காரர்களாவர்.  24 பேர் ஐ.ம.சு.முன்னணியைச் சேர்ந்தவர்களாவர். மேற்படி ஒவ்வொருவரும் தமது மாதச் சம்பளமான 54,285 ரூபாவினை இவ்வாறு, நிவாரணப் பணிகளுக்காக வழங்கியுள்ளனர். ஐ.தே.கட்சி

மேலும்...
சிறுநீரகம் தேவை; உயிர் காக்க உதவுங்கள்

சிறுநீரகம் தேவை; உயிர் காக்க உதவுங்கள் 0

🕔4.Jul 2017

சிறுநீரக நோயாளியொருவருக்கு (45 வயது), O வகை சிறுநீரகம் அவசரமாக தேவைப்படுகின்றது. வழங்க விரும்பும் நல்ல மனம் படைத்தவர்கள் உதவுங்கள்.  தகுந்த சன்மானம் வழங்கப்படும். தானஞ்செய்ய விரும்புபவர்கள், பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும். 0713503737 0714871397 0789887244

மேலும்...
கிழக்கு ஆளுநராக, முன்னாள் அமைச்சர் ரோஹித நியமனம்; ஊகங்களெல்லாம் பொய்யாகின

கிழக்கு ஆளுநராக, முன்னாள் அமைச்சர் ரோஹித நியமனம்; ஊகங்களெல்லாம் பொய்யாகின 0

🕔4.Jul 2017

முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம, கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படலாம் என்று, பல்வேறு நபர்களின் பெயர்கள் உச்சரிக்கப்பட்டு வந்த நிலையில், ரோஹித போகொல்லாகமவுக்கு இந்த இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண ஆளுநராகக் கடமையாற்றிய ஒஸ்ரின் பெனாண்டோ, ஜனாதிபதி செயலாளராக நியமிக்கப்பட்டமையினை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு, ரோஹித போகொல்லாகம நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும்...
பதிவுக்காக விண்ணப்பித்த 89 அரசியல் கட்சிகளுக்கு இடமில்லை ; 06 கட்சிகளுக்கு அங்கீகாரம்

பதிவுக்காக விண்ணப்பித்த 89 அரசியல் கட்சிகளுக்கு இடமில்லை ; 06 கட்சிகளுக்கு அங்கீகாரம் 0

🕔4.Jul 2017

இலங்கையில் மேலும் 06 அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக தம்மைப் பதிவு செய்து கொள்ளும் பொருட்டு, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு விண்ணப்பித்திருந்த 95 கட்சிகளில், மேற்படி 06 கட்சிகள் பதிவுக்காக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அதனால், தற்போது 64 ஆக உள்ள பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்