பொய்யான உறுதிப்படுத்தல் கடிதம் வழங்கிய அதிபர், வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு எதிராக நடவடிக்கை
![](http://puthithu.com/wp-content/uploads/2016/05/Ministry-Education-099.jpg)
விரைவில் இந்த விசாரணைகள் நடத்தப்படும் என்று மாகாணக் கல்வி அமைச்சு வட்டாரங்களில் இருந்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.
தகுதியற்ற தொண்டர் ஆசிரியர்களுக்கு உறுதிப்படுத்தல் கடிதம் வழங்கிய அதிபர்கள் மற்றும் அதனை உறுதிப்படுத்திய வலயக் கல்விப்பணிப்பாளர்களுக்
நியமனம் வழங்கலிலுள்ள விதிமுறைகளின் பிரகாரம், தொண்டராசிரியர்கள் 2011 டிசெம்பர் முதலாம் திகதிக்கு முன்பிருந்து தொடர்ச்சியாகப் பணியாற்றியிருக்க வேண்டும் என்ற நிபந்தனையுண்டு.
ஆனால், நியமனம் வேண்டி விண்ணப்பித்துள்ள பலர், 2011 ஆம் ஆண்டிலேயே உயர்தரப் பரீட்சைக்கு முதல் தடவையாகவும் மேலும் சிலர் இரண்டாவது தடவையாகவும் தோற்றியுள்ளனர் என அறிய முடிகிறது.
அவ்வாறிருந்தும், குறித்த நபர்களுக்கு பாடசாலைகளின் அதிபர்கள் உறுதிப்படுத்தல் கடிதம் வழங்கியுள்ளனர். இது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்று கூறப்படுகிறது.