அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில், ஒப்பந்த வேலை வழங்குவதில் மோசடி; அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாகவும் குற்றச்சாட்டு 0
– அஹமட் – வீதி நிர்மாணத்துக்கான ஒப்பந்த வேலையொன்றினை வழங்குவதில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் பாரிய மோசடியொன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. குறித்த வேலைக்காக ஒப்பந்ததாரரைத் தெரிவு செய்யும் பொருட்டு பகிரங்கமாக விலை மனுக்கோரும் அறிவித்தலை விடுக்க வேண்டிய போதும், ரகசியமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக ‘புதிது’ செய்தித்தளத்துக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இவ்வாறு பெறப்பட்ட விலை மனுக்களைத் திறக்கும்