Back to homepage

பிரதான செய்திகள்

ஊவா மாகாண சபை, இன்று கலைகிறது

ஊவா மாகாண சபை, இன்று கலைகிறது 0

🕔8.Oct 2019

– க. கிஷாந்தன் – ஊவா மாகாண சபையின் பதவிக்காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவுக்கு வரவுள்ளது. கடந்த 05 வருட காலப்பகுதியில் இந்த மாகாணத்தில் 05 ஆளுநர்களும், மாகாண சபையில் 03 முதலமைச்சர்களும் பதவி வகித்துள்ளனர். கடந்த மாகாண சபை தேர்தல் பெறுபேறுக்கு அமைவாக 36 உறுப்பினர்கள் இந்த சபையில் அங்கத்துவம் வகித்தனர். இவர்களில் 19

மேலும்...
ஹிஸ்புல்லாவுக்கு ஒட்டகம், இஸ்லியாஸுக்கு பந்து: வருகிறது மிக நீளமான வாக்குச் சீட்டு

ஹிஸ்புல்லாவுக்கு ஒட்டகம், இஸ்லியாஸுக்கு பந்து: வருகிறது மிக நீளமான வாக்குச் சீட்டு 0

🕔8.Oct 2019

– புதிது செய்தியாளர் – எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது வழங்கப்படும் வாக்குச் சீட்டானது, இதுவரையில் ஜனாதிபதி தேர்தலொன்றில் வழங்கப்பட்டவற்றில் மிக நீளம் கொண்டதாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. அந்த வகையில், 02 அடி 3 அங்குலம் நீளமானதுடையதாக, குறித்த வாக்குச் சீட்டு அமையும். இம்முறை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் 35 பேர் போட்டியிடுகின்றனர். அவர்களில்

மேலும்...
காணாமல் போன சாய்ந்தமருது மீனவர்கள், 20 நாட்களின் பின்னர் மீட்பு

காணாமல் போன சாய்ந்தமருது மீனவர்கள், 20 நாட்களின் பின்னர் மீட்பு 0

🕔7.Oct 2019

– நூறுள் ஹுதா உமர் – சாய்ந்தமருது மாளிகைகாடு மற்றும் காரைதீவு பிரதேசத்திலிருந்து கடற்றொழிலுக்குச் சென்றிருந்த நிலையில், கடந்த மாதம் 18ம் திகதி காணாமல் போன மீனவர்கள் திருகோணமலையிலிருந்து 154 கிலோ மீட்டர் தூரத்தில், படகுடன் இந்திய கடல் எல்லையில் மீட்கப்பட்டுள்ளனர் என அவர்களின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். இந்தப் படகு கடற்றொழில் அமைச்சின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் ஒப்பந்த வேலைகளுக்கு 04 வீதம் லஞ்சம்: கணக்காளர் மீது அதிக குற்றச்சாட்டு

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் ஒப்பந்த வேலைகளுக்கு 04 வீதம் லஞ்சம்: கணக்காளர் மீது அதிக குற்றச்சாட்டு 0

🕔7.Oct 2019

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினூடாக வழங்கப்படும் ஒப்பந்த வேலைகளுக்காக, அதனைப் பெற்றுக் கொள்கின்றவர்களிடமிருந்து 04 வீதம் எனும் அடிப்படையில் லஞ்சம் – பணமாகப் பெறப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது. உதாரணமாக, 10 லட்சம் ரூபா பெறுமதியான ஒப்பந்த வேலையொன்று வழங்கப்படும் போது, அதனைப் பெறும் ஒப்பந்தகாரரரிடமிருந்து 40 ஆயிரம் ரூபா (04 வீதம்) லஞ்சமாகப்

மேலும்...
கட்டுப் பணம் செலுத்திய 41 பேரில், 35 பேர் வேட்பு மனுத் தாக்கல்

கட்டுப் பணம் செலுத்திய 41 பேரில், 35 பேர் வேட்பு மனுத் தாக்கல் 0

🕔7.Oct 2019

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பொருட்டு தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வேட்புமனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்போது இரண்டு எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்ட போதிலும் அவை நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் நடவடிக்கை இன்று காலை 09 மணி முதல் 11 மணி வரையில் இடம்பெற்றது. அதனடிப்படையில் 35 பேர் 2019

மேலும்...
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய முஸ்லிம், தமிழர் பற்றிய முழு விவரம்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய முஸ்லிம், தமிழர் பற்றிய முழு விவரம் 0

🕔7.Oct 2019

நொவம்பர் மாதம் 16ஆம் தேதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட, முஸ்லிம் மற்றும் தமிழர் சமூகங்களைச் சேர்ந்த 06 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பொருட்டு மொத்தமாக 41 பேர் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அந்த வகையில், முஸ்லிம்கள் நால்வரும், தமிழர்கள் இருவரும், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காகக் கட்டுப்பணம்

மேலும்...
ஜனாதிபதி தேர்தல்: இன்று 11.30 வரை வேட்பு மனுத் தாக்கல்

ஜனாதிபதி தேர்தல்: இன்று 11.30 வரை வேட்பு மனுத் தாக்கல் 0

🕔7.Oct 2019

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது.  இன்று காலை  9.00 மணி தொடக்கம்  11.30 மணி வரையில்,  தேர்தல்கள் ஆணையக  அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன. அத்துடன்  வேட்புமனு தொடர்பில் எதிர்ப்புத் தெரிவிப்பதற்கும்  காலை 9.00 மணியிலிருந்து 11.30 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதன் பின்னர்  ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள்

மேலும்...
ஆட்டம் ஆரம்பம்: சஜித் சுவரொட்டிக்கு கழிவு ஒயில் வீச்சு

ஆட்டம் ஆரம்பம்: சஜித் சுவரொட்டிக்கு கழிவு ஒயில் வீச்சு 0

🕔6.Oct 2019

– பாறுக் ஷிஹான் – ஐக்கிய தேசிய முன்னணியின்  ஜனாதிபதி வேட்பாளர் என அறிவிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சஜீத் பிரேமதாசவின் படத்துடனான சுவரொட்டிகள் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இடங்களில் பரவலாக ஒட்டப்பட்டுள்ள நிலையில், அவற்றில் சிலவற்றுக்கு கழிவு ஒயில் வீசப்பட்டுள்ளன. ‘புதிய இலங்கையை நோக்கி’ எனும் தலைப்பிடப்பட்டுள்ள இச்சுவரொட்டிகள் அம்பாறை மாவட்டத்தில் தமிழ்  முஸ்லீம்

மேலும்...
ஜனாதிபதி தேர்தல்: கட்டுப் பணம் செலுத்தியவர்கள் அனைவரும் வேட்புமனு தாக்கல் செய்யும் சாத்தியமில்லை

ஜனாதிபதி தேர்தல்: கட்டுப் பணம் செலுத்தியவர்கள் அனைவரும் வேட்புமனு தாக்கல் செய்யும் சாத்தியமில்லை 0

🕔6.Oct 2019

– புதிது செய்தியாளர் – ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பொருட்டு 41 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ள போதிலும், அவர்களில் சிலர் – வேட்பு மனுவினை சமர்ப்பிக்க மாட்டார்களென அறிய முடிகிறது. அடுத்த மாதம் 16ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பொருட்டு 41 பேர் கட்டுப் பணம் செலுத்தியுள்ளனர். இவர்களில் 04 பேர் முஸ்லிம்கள்;

மேலும்...
ஒப்பந்த வேலையை வழங்க, 08 லட்சம் லஞ்சம்; அட்டாளைச்சேனை பிரதேச செயலக அதிகாரி பெற்றுக் கொண்டார்: முக்கிய சான்று கைவசம்

ஒப்பந்த வேலையை வழங்க, 08 லட்சம் லஞ்சம்; அட்டாளைச்சேனை பிரதேச செயலக அதிகாரி பெற்றுக் கொண்டார்: முக்கிய சான்று கைவசம் 0

🕔5.Oct 2019

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலக அதிகாரியொருவர் ஒப்பந்த வேலையொன்றுக்காக லஞ்சம் பெற்றுக் கொண்டமையினையும், மற்றொரு ஒப்பந்த வேலைக்கு கொமிஷன் (லஞ்சம்) கோரியமையினையும் நிரூபிப்பதற்குத் தேவையான சான்று ஒன்று ‘புதிது’ செய்தித்தளத்துக்குக் கிடைத்துள்ளது. அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினால் வழங்கப்படும் ஒப்பந்த வேலையொன்றினை ஏற்கனவே 08 லட்சம் ரூபாய் கொமிஷன் (லஞ்சம்) பெற்றுக் கொண்டு கொந்தராத்துக்காரர்

மேலும்...
ஜனாதிபதி தேர்தல்: 33 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்:  இருவர் முஸ்லிம்: ஒருவர் பெண்

ஜனாதிபதி தேர்தல்: 33 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்: இருவர் முஸ்லிம்: ஒருவர் பெண் 0

🕔5.Oct 2019

– மப்றூக் – ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் போருட்டு, இதுவரை 33 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இவர்களில் இருவர் முஸ்லிம்கள், ஏனையோர் சிங்களவர்கள். இந்த 33 பேரில் ஒருவர் பெண் வேட்பாளர். கட்டுப் பணம் செலுத்தும் இறுதித் தினம் நாளை ஞாயிற்றுக்கிழமையாகும். காலை 8.00 மணி முதல் நண்பகல் 12.00 மணிவரை

மேலும்...
ஒரே மேடையில் ஜனாதிபதி வேட்பாளர்கள்: இன்று சனிக்கிழமை

ஒரே மேடையில் ஜனாதிபதி வேட்பாளர்கள்: இன்று சனிக்கிழமை 0

🕔5.Oct 2019

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் ஒரே மேடையில் உறுதிமொழி பெறும் நிகழ்ச்சியொனறு இன்று சனிக்கிழமை நடைபெறவுள்ளது. மார்ச் 12 இயக்கம் மற்றும் எப்ரியல் இளைஞர் வலையமைப்பு இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று அதிகாரி ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முன்னணி வேட்பாளர்களை தெரிவு செய்து, சுகததாச

மேலும்...
சௌதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி: கொடூரமாக கொல்லப்பட்டதன் ஆதாரங்கள்

சௌதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி: கொடூரமாக கொல்லப்பட்டதன் ஆதாரங்கள் 0

🕔3.Oct 2019

(எச்சரிக்கை: சௌதி பத்திரிகையாளர் கொலை செய்யப்பட்டதை விவரிக்கும் இந்தக் கட்டுரை உங்கள் மனதை சங்கடப்படுத்தலாம்) இஸ்தான்புல் நகரில் வரிசையாக மரங்கள் நின்றிருந்த அமைதியான ஒரு பகுதி வழியே நான் நடந்து சென்று, நிறைய கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தியிருந்த நிற கட்டடம் ஒன்றை நெருங்கினேன். ஓராண்டுக்கு முன்பு நாடு கடத்தப்பட்டிருந்த சௌதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜியின் படம்

மேலும்...
அஷ்ரஃப் உங்கள் தந்தையாருக்கு ‘சும்மா’ ஆதரவு வழங்கவில்லை: சஜித் பிரேமதாஸவுக்கு பஷீர் சேகுதாவூத் பதில்

அஷ்ரஃப் உங்கள் தந்தையாருக்கு ‘சும்மா’ ஆதரவு வழங்கவில்லை: சஜித் பிரேமதாஸவுக்கு பஷீர் சேகுதாவூத் பதில் 0

🕔3.Oct 2019

முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாஸவின் வெற்றிக்கு அஷ்ரஃப் சும்மா ஆதரவு வழங்கவில்லை என்று, முன்னாள் அமைச்சரும் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தவிசாளருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். “எனது தந்தையின் வெற்றிக்கு அஷ்ரஃப் உதவியமையைப் போல், எனது வெற்றிக்கு ஆதரவளிக்க றவூப் ஹக்கீம் முன்வந்துள்ளமையினை பெருதும் மதிக்கிறேன்” என்று சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளமைமைக்கு, பதிலளிக்கும் வகையில் தனது

மேலும்...
பூஜித் ஜயசுந்தர, ஹெமசிறி ஆகியோரின் கணக்கு விவரங்களை பெறுமாறு நீதிமன்றம் உத்தரவு

பூஜித் ஜயசுந்தர, ஹெமசிறி ஆகியோரின் கணக்கு விவரங்களை பெறுமாறு நீதிமன்றம் உத்தரவு 0

🕔3.Oct 2019

கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெனாண்டோ ஆகியோரின் கணக்குகள் பற்றிய விவரங்களை 80 வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் இருந்து பெற்று வழங்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றப் புனாய்வுத் திணைக்களத்துக்கு இந்த உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்