ஆபத்தான கற்குவாரியின் அனுமதி ரத்து 0
– க. கிஷாந்தன் –திம்புள பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை மேபீல்ட் தோட்டத்தை அண்மித்த மலைப்பகுதியிலுள்ள, கற்குவாரியின் அனுமதிப்பத்திரம் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கற்குவாரியினால், அருகிலிருக்கும் தோட்ட உதவி கண்காணிப்பாளரின் இல்லம் மற்றும் தவறணை ஆகிவற்றுக்கு ஏற்படவுள்ள ஆபத்துக்கள் குறித்து, சுட்டிக்காட்டப்பட்டமையினை அடுத்து, மத்திய சுற்றாடல் அதிகாரசபையானது, குறித்த கற்குவாரிக்கான அனுமதிப் பத்திரத்தை இரத்து செய்வதாக அறிவித்துள்ளது.