மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த, ஆசிரியர் கைது
– க. கிஷாந்தன் –
மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்ததாக சந்தேகத்தின் பேரில் பாடசாலை ஆசிரியர் ஒருவரை மஸ்கெலியா பொலிஸார் இன்று செவ்வாய்கிழமை கைது செய்தனர்.
மஸ்கெலியா – ஸ்டஸ்பி தேவகந்த பிரதேச பாடசாலை ஒன்றில் பணியாற்றும் திருமணமான இரண்டு பிள்ளைகளின்ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
தரம் 11ல் கல்வி பயிலும் பாடசாலை மாணவியை, ஆசிரியர் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்ததாக மஸ்கெலியாபொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மாணவியின் பெற்றோர், இது குறித்து ஹ ட்டன் கல்வி வலய அதிகாரிகளிடம் முறையிட்டதன் பின்னர், மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். இதற்கமைய, குறித்த ஆசிரியரை பொலிஸார்சந் தேகத்தின் பேரில் கைது செய்தனர்.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 14ஆம் திகதி, சம்பந்தப்பட்ட ஆசிரியர் அவருடைய வீட்டில் வைத்து, மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்ததாக, குறித்த மாணவி பொலிஸாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
மாணவி மருத்துவ பரிசோதனைக்காக மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான ஆசிரியர் நாளை புதன்கிழமை ஹட்டன் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.