தொழினுட்பக் கல்விச் சேவையின் சிரேஷ்ட உத்தியோகத்தர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு 0
இலங்கை தொழினுட்பக் கல்விச் சேவையின் சிரேஷ்ட உத்தியோகத்தர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு, சம்மாந்துறை தொழினுட்பக் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது. இலங்கை தொழினுட்பக் கல்விச் சேவையின் நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்வுக்கு, அதன் தலைவர் எஸ்.எச்.எம். சல்மான் தலைமை தாங்கினார். இலங்கை தொழினுட்பக் கல்விச் சேவையானது, இலங்கையின் பதவிநிலைசார் நிறைவேற்றுத்தர பதவிகளுள் ஒன்றாகும்.