திறந்த கட்டிடத்தை திறக்க முயற்சிக்கும் மு.காங்கிரஸ்; சம்மாந்துறையில் புதினம்

🕔 April 10, 2017
– கே.ஏ. ஹமீட் –

முஸ்லிம் சமூகத்தில் எத்தனையோ பிரச்சினைகள் அப்படியே கிடப்பில் இருக்கின்றன. ஆனால் அரசியல்வாதிகளோ அவை எவற்றினையும் கிஞ்சித்தும் பாராது மக்களுக்கு வெற்றுப் படம் காட்டுவதிலேயே குறியாக இருக்கின்றனர்.

அந்த வகையில் புதிதாக வந்து சேர்ந்திருப்பது  சம்மாந்துறை பிரதேசத்தில் அமைந்திருக்கும், நில அளவை காரியாலய திறப்பு விழா நடவடிக்கையாகும்.

இலங்கை நில அளவைத் திணைக்களத்தின் சொந்த நிதியில், பிரதேச நில அளவையலர்களின் பிரத்தியேக முயற்சியில் மேற்படி காரியலம் கட்டப்பட்டு,
2017. 03. 17 ம் திகதி அன்று திறந்து வைக்கப்பட்டது. நில அளவை கண்காணிப்பாளர் எம்.டி. றபீக் மேற்படி காரியாலயத்தைத்  திறந்து வைத்தார்.

இந்த நிலையில், சம்மாந்துறையைச் சொந்த இடமாகக் கொண்ட மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர், அவருடைய கட்சித் தலைவரும் அமைச்சருமான றவூப் ஹக்கீமைக் கொண்டு, மேற்படி நில அளவைக் காரியாலயத்தை மீண்டும் திறப்பதற்கான முஸ்தீபுகளை செய்து வருவதாக நம்பகத் தகவல் வெளியாகி உள்ளன.

எம் சமுகத்தின் எத்தனையோ உரிமை மற்றும் அபிவிருத்தி சார்ந்த  பிரச்சினைகள் அப்படியே கிடப்பில் கிடக்க, தங்களுக்கு சம்மந்தமே இல்லாத – ஏற்கனவே திறந்து வைக்கப்பட்ட கட்டிடத்தை மீண்டும் திறப்பதற்கு விரயமாக்கும் நேரத்தை, மக்கள் குறைகளை நிவர்த்திக்க ஏன் செலவிடக் கூடாது என, சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்