அமைச்சின் மேலதிக செயலாளர் சலீம், சாய்ந்தமருதில் கௌரவிக்கப்பட்டார்

🕔 April 11, 2017

– யூ.கே.காலித்தீன் –

சாய்ந்தமருது முன்னாள் பிரதேச முன்னாள் செயலாளரும், சட்டம், ஒழுங்கு மற்றும் தென் மாகாண அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளருமான ஏ.எல்.எம். சலீம் நேற்று திங்கட்கிழமை சாய்ந்தமருத சீ பிரீஸ் ஹோட்டலில் கௌரவிக்கப்பட்டார்.

சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜூம்ஆப் பள்ளிவாசல் பரிபாலன சபை, இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது.

சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜூம்ஆப் பள்ளிவாசல்  பரிபாலன சபையின் தலைவர் வை.எம். ஹனீபா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் ஏ.எல். அப்துல் மஜீத், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனீபா, அம்பாறை மாவட்ட ஜம்மிய்யதுல் உலமா சபையின் தலைவர் மௌலவி எஸ்.எச். ஆதம்பாவா, சாய்ந்தமருது ஜம்மிய்யதுல் உலமா சபையின் தலைவர் யூ.எல்.எம். காசீம், சாய்ந்தமருது பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜூம்ஆப் பள்ளிவாசல்  பரிபாலன சபையின் செயலாளர் எம்.ஐ.ஏ.மஜீத் உள்ளிட்ட உலமாக்கள், கல்விமான்கள் மற்றும் மரைக்காயர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது மேலதிக செயலாளர் சலீம் ஆற்றிய சேவைகளின் தொகுப்புக்களை உள்ளடக்கி ‘சேவையின் சிகரம்’ எனும் மலரொன்றும் வெளியிடப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்