இலங்கையர்களுக்கு இந்தியா வழங்கும் புலமைப்பரிசில்: அனைத்துச் செலவுகளையும் உள்ளடக்கிய கொடுப்பனவு 0
ஆயுர்வேதம்,யோகா,யுனானி,சித்த மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆகிய துறைகளில் 2021-22 கல்வியாண்டில் பட்டப்படிப்பு/பட்டப்பின்படிப்பு/ கலாநிதி ஆகிய கற்கைநெறிகளை தொடர்வதற்கு விரும்பும் இலங்கை பிரஜைகளுக்கு ஆயுஷ் புலமைப்பரிசில் திட்டத்தின்கீழ், இந்திய உயர் ஸ்தானிகராலயம் புலமைப் பரிசில்களை அறிவித்துள்ளது. இலங்கை கல்வி அமைச்சின் ஆலோசனையின் பிரகாரம் திறமை வாய்ந்த இலங்கை பிரஜைகளை தெரிவு செய்து, இந்திய அரசாங்கம் புலமைப்பரிசில்களை வழங்குகிறது.