நாட்டுக்குள் வருவதற்கான பயணத் தடை 01ஆம் திகதி தொடக்கம் நீக்கம்

🕔 May 26, 2021

லங்கைக்கு வரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிக பயணத் தடையை ஜூன் 01ஆம் திகதி தொடக்கம் நீக்குவதற்கு அரசு தீர்மானித்துள்ளது.

எவ்வாறாயினும், கடந்த 14 நாட்களுக்குள் இந்தியாவுக்குச் சென்ற பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் மேலதிக அறிவிப்பு வரும் வரை தொடரும் என்று, இலங்கையின் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் உபாலி தர்மதாச தெரிவித்தார்.

கொரோனா தொற்றினுடைய மூன்றாவது அலை வேகமாக பரவி வருவதால், மே 21 முதல் 31 வரை நாட்டுக்குள் பயணிகள் இலங்கை அரசு தற்காலிகத் பயணத் தடை விதித்திருந்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்