Back to homepage

மேல் மாகாணம்

ராணுவத் தளபதிக்கு அமைச்சர் றிசாட் அழுத்தம் கொடுக்கவில்லை: ஆசு மாரசிங்க நாடாளுமன்றில் தெரிவிப்பு

ராணுவத் தளபதிக்கு அமைச்சர் றிசாட் அழுத்தம் கொடுக்கவில்லை: ஆசு மாரசிங்க நாடாளுமன்றில் தெரிவிப்பு 0

🕔22.May 2019

அமைச்சர் ரிஷாத் பதியுதீன், தொலைபேசியில் தன்னுடன் தொடர்புகொண்டு கைது செய்யபட்ட ஒருவர் தொடர்பிலான கோரிக்கை ஒன்றை மட்டுமே தன்னிடம் விடுத்தாகவும், அவர் தனக்கு எந்த அழுத்ததையும் பிரயோகிக்கவில்லை எனவும் ராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க   தன்னிடம் கூறியதாக கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க சபையில் தெரிவித்தார். அமைச்சர் ரிஷாத் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற

மேலும்...
ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு; அறிக்கை வழங்குமாறு சிறைச்சாலைத் திணைக்களத்திடம் கோரிக்கை

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு; அறிக்கை வழங்குமாறு சிறைச்சாலைத் திணைக்களத்திடம் கோரிக்கை 0

🕔21.May 2019

பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்கத் தீர்மானித்துள்ளார் என்று, ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதற்காக, சிறைச்சாலைத் திணைக்களத்திடமிருந்து தேரர் தொடர்பான அறிக்கையொன்றினை, ஜனாதிபதி செயலகம் கோரியுள்ளது. குறித்த அறிக்கை கிடைக்கப் பெற்றதும், தனது பொதுமன்னிப்பை ஜனாதிபதி அறிவிப்பார் என்றும், அந்த ஊடகம் தெரிவித்துள்ளது. வெலிக்கட சிறைச்சாலைக்கு

மேலும்...
இறந்தது சஹ்ரான்தான்; டீ.என்.ஏ. ஆய்வில் உறுதி

இறந்தது சஹ்ரான்தான்; டீ.என்.ஏ. ஆய்வில் உறுதி 0

🕔21.May 2019

கொழும்பு – ஷங்ரிலா நட்சத்திர ஹோட்டலில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்திய நபர், தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரான மொஹமத் சஹ்ரான் ஹாஷிம்jதான் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சஹ்ரான் ஹாஷிமின் மனைவி மற்றும் மகள் ஆகியோரின் டிஎன்ஏயுடன், ஷங்கிரில்லா நட்சத்திர ஹோட்டலில் கண்டெடுக்கப்பட்ட தலை பகுதியுடன் ஒப்பிட்டு நடத்தப்பட்ட டிஎன்ஏ பரிசோதனைகளிலேயே இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும்...
அமைச்சர் றிசாட்டுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்க, தெரிவிக்குழுவை நியமிக்கத் தீர்மானம்

அமைச்சர் றிசாட்டுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்க, தெரிவிக்குழுவை நியமிக்கத் தீர்மானம் 0

🕔21.May 2019

அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு எதிராக  முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு, நாடாளுமன்ற தெரிவுக் குழுவொன்றை  நியமிக்க, ஐக்கிய தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று செவ்வாய்கிழமை தீர்மானித்துள்ளனர். அமைச்சர் ரிஷாட் தொடர்பில் முன்னெடுக்கப்படவுள்ள விசாரணையின்போது, அவர் குற்றவாளியென நிருபனமானால், நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக, ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

மேலும்...
ஜனாதிபதி கொலைத் திட்டம்: நாலக சில்வாவுக்கு பிணை

ஜனாதிபதி கொலைத் திட்டம்: நாலக சில்வாவுக்கு பிணை 0

🕔21.May 2019

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை பிணையில் விடுதலை செய்ய கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டுள்ளது.  ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரை கொலை செய்வதற்கு திட்டம் வகுத்ததாக வெளியான ஒலிப்பதிவு தொடர்பில் கடந்த வருடம் ஒக்டோபர் 25ம் திகதி அவர் கைது செய்யப்பட்டார்.  பின்னர் நீதிமன்றத்தில்

மேலும்...
மினுவாங்கொட தாக்குலின் பின்னணியில், சில அரசியல்வாதிகளே இருந்தனர்: பௌத்த தேரர் தெரிவிப்பு

மினுவாங்கொட தாக்குலின் பின்னணியில், சில அரசியல்வாதிகளே இருந்தனர்: பௌத்த தேரர் தெரிவிப்பு 0

🕔20.May 2019

– அஸ்ரப் ஏ சமத் – மினுவாங்கொட நகரில் கடந்த வாரம் நடைபெற்ற  அசம்பாவிதங்களுக்கு பின்னால் இனக்குரோதம் கொண்ட சில அரசியல்வாதிகள் இருந்தார்கள் என்று மினுவான்கொட தர்மராம இந்துல உடக்கந்த ஜானந்த தேரர் தெரிவித்தார். மினுவாங்கொட நகர ஜூம்ஆப் பள்ளிவாசலில் சர்வமத தலைவர்களின் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது மீண்டும் சக வாழ்வினை ஏற்படுத்தும் முகமாக ஊடக சந்திப்பு

மேலும்...
என்னிடமிருந்து உதவிகளைப் பெற்ற அரசியல்வாதிகள், எனக்கு உதவவில்லை: மாகந்துர மதுஷ்

என்னிடமிருந்து உதவிகளைப் பெற்ற அரசியல்வாதிகள், எனக்கு உதவவில்லை: மாகந்துர மதுஷ் 0

🕔19.May 2019

ஏராளமான அரசியல்வாதிகளுக்கு தான் உதவி செய்துள்ளதாகவும், ஆனால், அவர்கள் எவரும் தனக்கு உதவவில்லை என்றும், பாதாள உலகத் தலைவர் மாகந்துர மதுஷ் தெரிவித்துள்ளார். துபாயில் கைது செய்து நாடு கடத்தப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வரும் மதுஷ், இவ்வாறு கூறியுள்ளார். சில அரசியல்வாதிகள் தன்னிடமிருந்து பண உதவி பெற்றதாகவும், சிலர் தேர்தல்களின் போது

மேலும்...
றிசாட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை; ஆதரவாகவே மஹிந்த வாக்களிப்பார்: கம்மன்பில

றிசாட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை; ஆதரவாகவே மஹிந்த வாக்களிப்பார்: கம்மன்பில 0

🕔19.May 2019

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கையெழுத்திடாவிட்டாலும், அவர், இதற்கு ஆதரவாகவே வாக்களிப்பார் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் மஹிந்த ஏன் கையெழுத்திடவில்லை என அனைவரும் வினவுவதாகத் தெரிவித்த அவர், அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, ராஜித சேனாரத்ன ஆகிய இருவருக்கும்

மேலும்...
ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன்: கோட்டா

ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன்: கோட்டா 0

🕔18.May 2019

ஜனாதிபதி தேர்தலில் நிச்சயமாக போட்டியிடுவேன் என்று பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அல் ஜசீராவிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை கூறியுள்ளார். நிச்சயமாக நான் போட்டியிடுவேன். இதை குறித்து நீண்ட காலத்திற்கு முன்பே நான் தீர்மானித்துவிட்டேன். இல்லாவிட்டால் அமெரிக்க பிரஜாவுரிமையை நான் கைவிடவேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவித்துள்ளார். உயிர்த்தஞாயிறு தாக்குதல்களின் பின்னர் ஜனாதிபதி

மேலும்...
ஜும்ஆ பிரசங்கம்; காட்டுக் கத்தல்களை தவிர்க்க வேண்டும்

ஜும்ஆ பிரசங்கம்; காட்டுக் கத்தல்களை தவிர்க்க வேண்டும் 0

🕔18.May 2019

– அஸீஸ் நிஸார்டீன் – இன்றைய ஜும்ஆ பிரசங்கம் கொழும்பு கிறேன்பாஸ் மஸ்ஜிதில் மற்றுமொரு காட்டுக் கத்தலாகவே அமைந்தது. அரசியல் மேடைகளில் கூட இவ்வாறு ஆக்ரோஷமாக ‘கத்த’மாட்டார்கள். ஏற்ற இறக்கம் இடைவெளி எதுவும் இல்லாமல் வெறும் இரைச்சலாகவே பிரசங்கம் அமைந்திருந்தது. பள்ளிவாசலுக்கு வெளியே காவலுக்கு நின்ற ராணுவத்தினர் என்ன நினைத்தார்களோ தெரியாது. பள்ளிவாசல்களில் ஏதோ தீவிரவாதம்

மேலும்...
சஹ்ரானுடன் நெருக்கமானோர் இருவர், ஹொரவபொத்தானையில் கைது

சஹ்ரானுடன் நெருக்கமானோர் இருவர், ஹொரவபொத்தானையில் கைது 0

🕔17.May 2019

பயங்கரவாதி சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பினைக் கொண்டவர்கள் எனும் சந்தேகத்தின் பேரில், ஹொரவபொத்தானையில் இன்று இருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். ஈஸ்டர் தின தற்கொலைத் தாக்குதல்களுடன் இவர்களுக்குள்ள தொடர்புகள் குறித்து தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இதேவேளை, முகம்மட் றிஸ்வான் என்பவர் நேற்றைய தினம் மாபோளை – வத்தளை பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். தற்கொலைப் பயங்கரவாதிகளுடன் தொடர்பு

மேலும்...
விவரம்தான் கேட்டேன், விடுவிக்கச் சொல்லவில்லை; ராணுவத் தளபதியின் கூற்றை மறுக்கிறார் அமைச்சர் றிசாட்

விவரம்தான் கேட்டேன், விடுவிக்கச் சொல்லவில்லை; ராணுவத் தளபதியின் கூற்றை மறுக்கிறார் அமைச்சர் றிசாட் 0

🕔17.May 2019

– ஏ.எச். சித்தீக் காரியப்பர் – உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலின் பின்னர் கைது செய்யப்பட்ட ஒருவரை விடுவிக்குமாறு ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்காவிடம் எந்தக் கோரிக்கையையும் நான் முவைக்கவில்லை என அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். இருப்பினும் சந்தேகத்தில் பேரில் கைது செய்யப்பட்ட ஒருவர் தொடர்பான தகவலை அறிந்து கொள்வதற்காக

மேலும்...
கைதான நபரை விடுவிக்குமாறு, அமைச்சர் றிசாட் கோரிக்கை விடுத்தார்: ராணுவத் தளபதி

கைதான நபரை விடுவிக்குமாறு, அமைச்சர் றிசாட் கோரிக்கை விடுத்தார்: ராணுவத் தளபதி 0

🕔17.May 2019

ஈஸ்டர் தின தாக்குதலில் கைது செய்யப்பட்ட ஒருவரை விடுவிக்க அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கோரிக்கை விடுத்தது உண்மையே. ஆனால் அவரது கோரிக்கையை நான் ஏற்கவில்லை. ஒன்றரை ஆண்டுகள் கழித்து மீண்டும் தொலைபேசி அழைப்பொன்றை தாருங்கள் அப்போது பார்க்கலாம் என்று கூறிவிட்டேன் என ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனநாயக தெரிவித்துள்ளார். அமைச்சர் ரிஷாத் கோரிக்கையை

மேலும்...
அந்தோனியார் தேவாலய தற்கொலைதாரியின் மனைவிக்கு, முதல் குழந்தை கிடைத்துள்ளது; நீதிமன்றில் தகவல்

அந்தோனியார் தேவாலய தற்கொலைதாரியின் மனைவிக்கு, முதல் குழந்தை கிடைத்துள்ளது; நீதிமன்றில் தகவல் 0

🕔16.May 2019

ஏப்ரல் 21ஆம் திகதியன்று கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்திய அலாவுதீன் அஹமட் முஆத் என்பவரின் மனைவிக்கு, இம்மாதம் 05ஆம் திகதி முதலாவது குழந்தை கிடைத்துள்ளது. கொழும்பு நீதிவான் நீதிமன்றில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அகமட் முஆத் எனும் 22 வயதுடைய மேற்படி நபர் ஒரு சட்டப் பட்டதாரி என்பது குறிப்பிடடத்தக்கது.

மேலும்...
மினுவாங்கொடயில் முஸ்லிம் ஒருவரின் கடைக்கு தீ வைப்பு

மினுவாங்கொடயில் முஸ்லிம் ஒருவரின் கடைக்கு தீ வைப்பு 0

🕔16.May 2019

மினுவாங்கொடயிலுள்ள முஸ்லிம் ஒருவரின் கடையொன்றுக்கு இன்று வியாழக்கிழமை தீ வைக்கப்பட்டுள்ளது. இன்று நண்பகலளவில் குறித்த கடைக்குத் தீ வைக்கப்பட்டுள்ளதாக, அங்கிருக்கும் ஊடகவியலாளர் ஒருவர் ‘புதிது’ செய்தித்தளத்துக்கு உறுதிப்படுத்தினார். மினுவாங்கொடயில் விமான நிலைய வீதியில் நேற்று முன்தினம் தாக்குதலுக்குள்ளான பவ்ஸ் ஹோட்டலில் இருந்து சுமார் 100 மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள கடையொன்றுக்கே தீ வைக்கப்பட்டுள்ளது. குறித்த கடை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்