Back to homepage

மேல் மாகாணம்

ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன்: கோட்டா

ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன்: கோட்டா 0

🕔18.May 2019

ஜனாதிபதி தேர்தலில் நிச்சயமாக போட்டியிடுவேன் என்று பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அல் ஜசீராவிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை கூறியுள்ளார். நிச்சயமாக நான் போட்டியிடுவேன். இதை குறித்து நீண்ட காலத்திற்கு முன்பே நான் தீர்மானித்துவிட்டேன். இல்லாவிட்டால் அமெரிக்க பிரஜாவுரிமையை நான் கைவிடவேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவித்துள்ளார். உயிர்த்தஞாயிறு தாக்குதல்களின் பின்னர் ஜனாதிபதி

மேலும்...
ஜும்ஆ பிரசங்கம்; காட்டுக் கத்தல்களை தவிர்க்க வேண்டும்

ஜும்ஆ பிரசங்கம்; காட்டுக் கத்தல்களை தவிர்க்க வேண்டும் 0

🕔18.May 2019

– அஸீஸ் நிஸார்டீன் – இன்றைய ஜும்ஆ பிரசங்கம் கொழும்பு கிறேன்பாஸ் மஸ்ஜிதில் மற்றுமொரு காட்டுக் கத்தலாகவே அமைந்தது. அரசியல் மேடைகளில் கூட இவ்வாறு ஆக்ரோஷமாக ‘கத்த’மாட்டார்கள். ஏற்ற இறக்கம் இடைவெளி எதுவும் இல்லாமல் வெறும் இரைச்சலாகவே பிரசங்கம் அமைந்திருந்தது. பள்ளிவாசலுக்கு வெளியே காவலுக்கு நின்ற ராணுவத்தினர் என்ன நினைத்தார்களோ தெரியாது. பள்ளிவாசல்களில் ஏதோ தீவிரவாதம்

மேலும்...
சஹ்ரானுடன் நெருக்கமானோர் இருவர், ஹொரவபொத்தானையில் கைது

சஹ்ரானுடன் நெருக்கமானோர் இருவர், ஹொரவபொத்தானையில் கைது 0

🕔17.May 2019

பயங்கரவாதி சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பினைக் கொண்டவர்கள் எனும் சந்தேகத்தின் பேரில், ஹொரவபொத்தானையில் இன்று இருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். ஈஸ்டர் தின தற்கொலைத் தாக்குதல்களுடன் இவர்களுக்குள்ள தொடர்புகள் குறித்து தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இதேவேளை, முகம்மட் றிஸ்வான் என்பவர் நேற்றைய தினம் மாபோளை – வத்தளை பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். தற்கொலைப் பயங்கரவாதிகளுடன் தொடர்பு

மேலும்...
விவரம்தான் கேட்டேன், விடுவிக்கச் சொல்லவில்லை; ராணுவத் தளபதியின் கூற்றை மறுக்கிறார் அமைச்சர் றிசாட்

விவரம்தான் கேட்டேன், விடுவிக்கச் சொல்லவில்லை; ராணுவத் தளபதியின் கூற்றை மறுக்கிறார் அமைச்சர் றிசாட் 0

🕔17.May 2019

– ஏ.எச். சித்தீக் காரியப்பர் – உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலின் பின்னர் கைது செய்யப்பட்ட ஒருவரை விடுவிக்குமாறு ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்காவிடம் எந்தக் கோரிக்கையையும் நான் முவைக்கவில்லை என அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். இருப்பினும் சந்தேகத்தில் பேரில் கைது செய்யப்பட்ட ஒருவர் தொடர்பான தகவலை அறிந்து கொள்வதற்காக

மேலும்...
கைதான நபரை விடுவிக்குமாறு, அமைச்சர் றிசாட் கோரிக்கை விடுத்தார்: ராணுவத் தளபதி

கைதான நபரை விடுவிக்குமாறு, அமைச்சர் றிசாட் கோரிக்கை விடுத்தார்: ராணுவத் தளபதி 0

🕔17.May 2019

ஈஸ்டர் தின தாக்குதலில் கைது செய்யப்பட்ட ஒருவரை விடுவிக்க அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கோரிக்கை விடுத்தது உண்மையே. ஆனால் அவரது கோரிக்கையை நான் ஏற்கவில்லை. ஒன்றரை ஆண்டுகள் கழித்து மீண்டும் தொலைபேசி அழைப்பொன்றை தாருங்கள் அப்போது பார்க்கலாம் என்று கூறிவிட்டேன் என ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனநாயக தெரிவித்துள்ளார். அமைச்சர் ரிஷாத் கோரிக்கையை

மேலும்...
அந்தோனியார் தேவாலய தற்கொலைதாரியின் மனைவிக்கு, முதல் குழந்தை கிடைத்துள்ளது; நீதிமன்றில் தகவல்

அந்தோனியார் தேவாலய தற்கொலைதாரியின் மனைவிக்கு, முதல் குழந்தை கிடைத்துள்ளது; நீதிமன்றில் தகவல் 0

🕔16.May 2019

ஏப்ரல் 21ஆம் திகதியன்று கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்திய அலாவுதீன் அஹமட் முஆத் என்பவரின் மனைவிக்கு, இம்மாதம் 05ஆம் திகதி முதலாவது குழந்தை கிடைத்துள்ளது. கொழும்பு நீதிவான் நீதிமன்றில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அகமட் முஆத் எனும் 22 வயதுடைய மேற்படி நபர் ஒரு சட்டப் பட்டதாரி என்பது குறிப்பிடடத்தக்கது.

மேலும்...
மினுவாங்கொடயில் முஸ்லிம் ஒருவரின் கடைக்கு தீ வைப்பு

மினுவாங்கொடயில் முஸ்லிம் ஒருவரின் கடைக்கு தீ வைப்பு 0

🕔16.May 2019

மினுவாங்கொடயிலுள்ள முஸ்லிம் ஒருவரின் கடையொன்றுக்கு இன்று வியாழக்கிழமை தீ வைக்கப்பட்டுள்ளது. இன்று நண்பகலளவில் குறித்த கடைக்குத் தீ வைக்கப்பட்டுள்ளதாக, அங்கிருக்கும் ஊடகவியலாளர் ஒருவர் ‘புதிது’ செய்தித்தளத்துக்கு உறுதிப்படுத்தினார். மினுவாங்கொடயில் விமான நிலைய வீதியில் நேற்று முன்தினம் தாக்குதலுக்குள்ளான பவ்ஸ் ஹோட்டலில் இருந்து சுமார் 100 மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள கடையொன்றுக்கே தீ வைக்கப்பட்டுள்ளது. குறித்த கடை

மேலும்...
ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் 85 பேர் கைது; 10 பேர் பெண்கள்

ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் 85 பேர் கைது; 10 பேர் பெண்கள் 0

🕔16.May 2019

ஈஸ்டர் தின பயங்கரவாதத் தற்கொலைத் தாக்குதலுடன் தொடர்புடைய 85 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இவர்களில் 10 பேர் பெண்களாவர். கைது செய்யப்பட்டவர்களில் 64 பேர் – குற்றப் புனாய்வுப் பிரிவிலும், 20 பேர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவிலும் வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். பயங்கரவாதிகள் தங்கியிருந்த 17

மேலும்...
அமைச்சர் றிசாட்டுக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை சமர்ப்பிப்பு; பொதுஜன பெரமுன ஆரவளிப்பதில் சிக்கல்

அமைச்சர் றிசாட்டுக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை சமர்ப்பிப்பு; பொதுஜன பெரமுன ஆரவளிப்பதில் சிக்கல் 0

🕔16.May 2019

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரண சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரேரணையில் 66 பேர் கையொப்பமிட்டுள்ளதாக ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இந்த நிலையில், அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக, சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ​ஆதரவளிப்பது குறித்து, இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என

மேலும்...
பாதுகாப்புத் துறைக்கு 260 கோடி ரூபாவை அன்பளிப்பாக வழங்க, சீனா இணக்கம்

பாதுகாப்புத் துறைக்கு 260 கோடி ரூபாவை அன்பளிப்பாக வழங்க, சீனா இணக்கம் 0

🕔15.May 2019

இலங்கையின் பாதுகாப்புதுறையினரின் செயற்பாடுகளுக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கோரிக்கைக்கு அமைய 260 கோடி ரூபாய் நிதி உதவி வழங்க, சீன அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக, ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளையில் இலங்கையிலிருந்து பயங்கரவாதத்தை வேரறுத்து, தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அனைத்து வழிகளிலும் இலங்கைக்கு உதவத் தயாரென ஜனாதிபதியிடம் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்

மேலும்...
முஸ்லிம்களின் பாதுகாப்பை பலப்படுத்துங்கள்: இலங்கையிடம் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு வேண்டுகோள்

முஸ்லிம்களின் பாதுகாப்பை பலப்படுத்துங்கள்: இலங்கையிடம் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு வேண்டுகோள் 0

🕔15.May 2019

இலங்கை முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு, ‘முஸ்லிம் நாடுகளின் ஒருமித்த குரல்’ என தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (ஓ.ஐ.சி), இலங்கை அரசாங்கத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. உச்சமடைந்து செல்லும் வன்முறை, தீவிரவாதம், வெறுக்கத்தக்க பேச்சு ஆகியவற்றினால் பரவும் அச்ச நிலையினையும், சமூகங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள அவநம்பிக்கையினையும் எதிர்த்து நிற்குமாறும், அந்த அமைப்பு இலங்கையிடம் கோரியுள்ளது. இலங்கையில்

மேலும்...
அமித் வீரசிங்கவை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு

அமித் வீரசிங்கவை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு 0

🕔15.May 2019

மஹசோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேற்று தெல்தெனிய பிரதேசத்தில் வைத்து விஷேட பொலிஸ் குழுவினர் இவரை கைது செய்தனர். இந்த நிலையில், அமித் வீரசிங்கவை எதிர்வரும் 28ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் இன்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.  கடந்த

மேலும்...
சஹ்ரானின் லட்டொப்பில் காணப்பட்ட பெயர்களின் அடிப்படையில் 40 பேர் கைது

சஹ்ரானின் லட்டொப்பில் காணப்பட்ட பெயர்களின் அடிப்படையில் 40 பேர் கைது 0

🕔14.May 2019

பயங்கரவாதி சஹ்ரானின் லப்டொப் கணிணியில் இருந்த பெயர்களின் அடிப்படையில் 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆங்கில இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நுவரெலியாவில் சஹ்ரான் தங்கியிருந்த இடத்தில் மேற்படி கணிணி கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ளவர்களில் அதிகமானோர் காத்தான்குடியைச் சேர்ந்தவர்களாவர். இதேவேளை ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தின் பேரில் காத்தான்குடியைச் சேர்ந்தத இரண்டு வர்த்தகர்கள் பிபிலையில் கைது

மேலும்...
மினுவாங்கொட தாக்குதலில் ஈடுபட்ட 74 பேர் கைது

மினுவாங்கொட தாக்குதலில் ஈடுபட்ட 74 பேர் கைது 0

🕔14.May 2019

மினுவாக்கொடை பகுதியில் வன்முறைகளில் ஈடுபட்டார்கள் எனும் குற்றச்சாட்டில் 74 பேரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களுள் 33 பேர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை ‘ நவ சிங்ஹலே ‘ அமைப்பின் தலைவர் டேன் பிரியஸாத் என்பவரை குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கொழும்பு – வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை இடம்மாற்றுமாறு

மேலும்...
மினுவாங்கொடயில் 30 கடைகள் மீது தாக்குதல்; 20 கடைகள் தீயில் நாசம்

மினுவாங்கொடயில் 30 கடைகள் மீது தாக்குதல்; 20 கடைகள் தீயில் நாசம் 0

🕔14.May 2019

கம்பஹா மாவட்டம் மினுவாங்கொட பிரதேசத்திலுள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான சுமார் 30 கடைகள் தாக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 20 கடைகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாகவும் அங்குள்ள உள்ளுரா் ஊடகவியலாளர் ஒருவர் பிபிசியிடம் கூறினார். இது இவ்வாறிருக்க, மினுவாங்கொட பிரதேசத்திலிருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள கல்லொளுவ பகுதிலுள்ள முஸ்லிம்கள் மீது படையினர் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், குறித்த உள்ளூர் ஊடகவியலாளர் தெரிவித்தார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்