யானைத் தந்தத்தை பஸ்ஸில் கடத்திய நபருக்கு, 14 நாட்கள் விளக்க மறியல்: கல்முனை நீதிமன்றம் உத்தரவு 0
– பாறுக் ஷிஹான் – யானைத்தந்தம் ஒன்றினை சட்டவிரோதமாக கடத்திச் சென்ற இளைஞன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை கல்முனை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியநீலாவணை ஓந்தாட்சிமடம் ராணுவ சோதனை சாவடியில் வைத்து, கடந்த சனிக்கிழமை (10) அதிகாலை, குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார். கல்முனை ஊடாக திருகோணமலைக்கு பயணம் செய்த