இணையத் தளம் ஊடாக பாலியல் தேவைக்கு கல்கிஸ்ஸையில் சிறுமி விற்கப்பட்ட விவகாரம்: மாலைதீவு முன்னாள் அமைச்சர் கைது

🕔 July 5, 2021

லங்கையில் 15 வயது சிறுமியொருவர் பாலியல் தேவைகளுக்காக இணையத்தளம் ஊடாக விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நேற்று கைதுசெய்யப்பட்ட மாலைதீவு பிரஜை, அந்த நாட்டின் முன்னாள் நிதி ராஜாங்க அமைச்சர் என தெரியவந்துள்ளது.

கல்கிசையில் 15 வயதான சிறுமியொருவர் பாலியல் தேவைகளுக்காக பலருக்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரையில் சிறுமியின் தாய் உட்பட 32 சந்தேகநபர்கள் கைதுசெய்யபப்பட்டுள்ளனர்.

அத்துடன், குறித்த சிறுமியுடன் பாலியல் செயற்பாடுகளில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தில் 45 வயதான மாலைதீவு பிரஜையொருவரை குற்றப்புலனாய்வு திணைக்களம் கைதுசெய்தது.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபர் மாலைதீவின் முன்னாள் நிதி ராஜாங்க அமைச்சரான மொஹமட் அஷ்மாலி என இலங்கை பொலிஸாரிடம் உறுதிப்படுத்தியுள்ளதாக மாலைதீவு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபரான முன்னாள் இராஜாங்கம் அமைச்சர் எனக்கூறப்படும் நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, அவரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்