பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை பதவி நீக்குவதற்கான தீர்மானம், நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்படவுள்ளதாக தகவல் 0
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை நீக்குவதற்கான தீர்மானம், ஏப்ரல் இறுதி வாரத்தில் நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படும் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, ஜனக ரத்நாயக்கவுக்கு நிதியமைச்சு இரண்டு பக்க குற்றப்பத்திரிகையை அனுப்பியது. பதிலுக்கு 25 பக்கங்கள் கொண்ட பதிலை வழங்கியதாக தான் அனுப்பி வைத்ததாக ஜனக ரத்நாயக்க ஊடகங்களுக்கு தெரிவித்தார்.