நாளாந்த மின்வெட்டு: இன்று தொடக்கம் அமுலாகலாம்

🕔 February 15, 2022

நாளாந்த மின் வெட்டு இன்று (15) தொடக்கம் அமுல்படுத்தப்படக் கூடும் என, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நீர் மின் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி மற்றும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக இந்த மின்வெட்டு அமுல் செய்யப்படுக் கூடும்.

இதற்கமைய, மின் வெட்டு அமுல்படுத்தப்படும் வழிமுறைகள் இன்று பிற்பகல் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க கூறியுள்ளார்.

இதேவேளை, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு மின்சாரத்தை முகாமைத்துவம் செய்வதற்கான உரிய வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்படும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்