நாடு நாளை தொடக்கம் இருளில் மூழ்கும்

🕔 January 9, 2022

நாட்டில் நாளை (10) தொடக்கம் ஒரு மணித்தியாலம் அல்லது இரண்டு மணித்தியாலங்களுக்கு மின்வெட்டினை அமுல்படுத்துவதற்கு, இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளதாக என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எரிபொருள் பற்றாக்குறை காரணமாக கடந்த சில நாட்களாக மின் தடை ஏற்பட்டது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தேவையான எரிபொருளை விநியோகித்ததாலும், வார இறுதியில் தேவை குறைவாக இருந்ததாலும் இன்று ( 09) மின்வெட்டு அமுல்படுத்தப்படாது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்