பேராயர் மெல்கம் ரஞ்சித் தலைமையிலான குழுவுக்கும் பாப்பரசருக்கும் இடையில் வத்திக்கானில் சந்திப்பு

பேராயர் மெல்கம் ரஞ்சித் தலைமையிலான குழுவுக்கும் பாப்பரசருக்கும் இடையில் வத்திக்கானில் சந்திப்பு 0

🕔28.Feb 2022

பேராயர் மெல்கம் ரஞ்சித் தலைமையிலான இலங்கை கத்தோலிக்கக் குழுவினர் இன்று (28) வத்திக்கானில் பாப்பரசர் பிரான்சிஸ்ஸை சந்தித்தனர். ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்ட வத்திக்கானுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக பேராயர் ரஞ்சித் தெரிவித்திருந்த நிலையில், இந்த சந்திப்பு நடந்துள்ளது. நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க தன்னால் இயன்ற உதவிகளை வழங்குவதாக உறுதியளித்து,

மேலும்...
“ஜனாதிபதியின் பொதுமன்னிப்பை எதிர்பார்க்கிறீர்களா”; ஊடகவியலாளர்களின் கேள்விக்கு ரஞ்சன் பதில்

“ஜனாதிபதியின் பொதுமன்னிப்பை எதிர்பார்க்கிறீர்களா”; ஊடகவியலாளர்களின் கேள்விக்கு ரஞ்சன் பதில் 0

🕔28.Feb 2022

“மன்னிப்பு கோர மாட்டேன்” என நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்காக சிறை தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். சிறப்பு ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று (28) சாட்சியமளிக்க அழைத்து வரப்பட்டிருந்த ரஞ்சன் ராமநாயக்க, அங்கிருந்து வெளியேறும் போது ஊடகவியலாளர்களை பார்த்து இதனை கூறியுள்ளார். “ஜனாதிபதியின் பொது மன்னிப்பு கிடைக்குமா, நீங்கள் அதனை

மேலும்...
அம்பாறை மாவட்டத்தின் பெயரை மாற்ற முயற்சி; அதாஉல்லா கடும் எதிர்ப்பு: வாய்மூடியிருந்தார் முஷாரப்

அம்பாறை மாவட்டத்தின் பெயரை மாற்ற முயற்சி; அதாஉல்லா கடும் எதிர்ப்பு: வாய்மூடியிருந்தார் முஷாரப் 0

🕔28.Feb 2022

அம்பாறை மாவட்டத்தின் பெயரை ‘திகாமடுல்ல’ என மாற்றுவதற்கு முன்வைக்கப்பட்ட யோசனைக்கு, முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லா எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார். அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம் இன்று (28) நடைபெற்ற போது, ராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க குறித்த யோசனையை முன்வைத்தார். இதனையடுத்து ராஜாங்க அமைச்சருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் அதாஉல்லாவிற்கும் இடையில் கடுமையான

மேலும்...
யுக்ரேன் – ரஷ்யா உயர்மட்டப் பேச்சுவார்தை ஆரம்பம்: தாக்குதல் வேகம் குறைந்துள்ளதாகவும் தெரிவிப்பு

யுக்ரேன் – ரஷ்யா உயர்மட்டப் பேச்சுவார்தை ஆரம்பம்: தாக்குதல் வேகம் குறைந்துள்ளதாகவும் தெரிவிப்பு 0

🕔28.Feb 2022

யுக்ரேன் – ரஷ்யாவுக்கு இடையில் உயர் மட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்று வருகின்றது. யுக்ரேன் – பெலாரஸ் எல்லையில் இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெறுகிறது. யுக்ரேனுக்கு அடுத்த 24 மணிநேரம் முக்கியமானது என்று, அந்த நாட்டு ஜனாதிபதி வொலோடிமிர் ஷெலென்ஸ்கி கூறியிருந்த நிலையில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதேவேளை ரஷ்யாவின் தாக்குதலின் வேகம் குறைந்துள்ளதாக யுக்ரேன் ராணுவம்

மேலும்...
திருக்கோவில், பொத்துவில் வைத்தியசாலைகளுக்கு அம்புலன்ஸ் வண்டிகள் வழங்கி வைப்பு

திருக்கோவில், பொத்துவில் வைத்தியசாலைகளுக்கு அம்புலன்ஸ் வண்டிகள் வழங்கி வைப்பு 0

🕔28.Feb 2022

– நூருள் ஹுதா உமர், எம்.என்.எம். அப்ராஸ் – திருக்கோவில் மற்றும் பொத்துவில் வைத்தியசாலைகளுக்கு அவசரத் தேவையாக இருந்த அம்புலன்ஸ் வண்டிகள் இன்று (28) கையளிக்கப்பட்டன. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் வைத்து குறித்த வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர்களிடம் குறித்த அம்புலன்ஸ் வண்டிகளை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஐ.எல்.எம். றிபாஸ் கையளித்தார்.  இந்த

மேலும்...
குடியிருப்பு பகுதிகளுக்கு அருகாமையில் மலைகளுக்கு வெடி வைப்பதை நிறுத்துமாறு கோரி, சங்கமன் கிராமத்தில் ஆர்ப்பாட்டம்

குடியிருப்பு பகுதிகளுக்கு அருகாமையில் மலைகளுக்கு வெடி வைப்பதை நிறுத்துமாறு கோரி, சங்கமன் கிராமத்தில் ஆர்ப்பாட்டம் 0

🕔28.Feb 2022

– முன்ஸிப் – அம்பாறை மாவட்டம் – சங்கமன் கிராம குடியிருப்புப் பகுதிகளை அண்டியுள்ள மலைகளை வெடி வைத்து உடைப்பதனால், மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாவதாகவும், அதனால் அந்த நடவடிக்கைகளை நிறுத்துமாறும் கோரி, இன்று ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது. சங்கமன் கிராமம், தாண்டியடி மற்றும் சங்கமன் கண்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் பொதுமக்களும்

மேலும்...
பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர் பதவியிலிருந்து, முன்னாள் தவிசாளர் வாஸீத் ராஜிநாமா

பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர் பதவியிலிருந்து, முன்னாள் தவிசாளர் வாஸீத் ராஜிநாமா 0

🕔28.Feb 2022

– அஹமட் – பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.எஸ். அப்துல் வாஸீத், தனது பிரதேச சபை உறுப்பினர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை, இன்று (28) அவர் பிரதேச சபை செயலாளரிடம் ஒப்படைத்துள்ளார். அம்பாறை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளருக்கு முகவரியிடப்பட்ட குறித்த கடிதத்தில்; பொத்துவில் – ஹிதாயாபுரம் வட்டாரத்துக்கான பிரதேச

மேலும்...
பசில் ராஜபக்ஷ: மற்றுமொரு வழக்கிலிருந்தும் விடுவிப்பு

பசில் ராஜபக்ஷ: மற்றுமொரு வழக்கிலிருந்தும் விடுவிப்பு 0

🕔28.Feb 2022

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு ஒன்றிலிருந்து, இன்று (28) அவர் விடுவிக்கப்பட்டார். அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக, பசில் ராஜபக்டஷவுக்கு எதிராக கடுவெல நீதவான் நீதிமன்றில், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தாக்கல் செய்த வங்கில் இருந்தே, அவரை நீதவான் விடுவித்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே, அவரை வழக்கிலிருந்து

மேலும்...
எல்லா திசைகளிலும் ரஷ்யா ஷெல் தாக்குதல்: யுக்ரேன் – ரஷ்யா பேச்சு, இன்று திங்கள் காலை தொடங்கும்

எல்லா திசைகளிலும் ரஷ்யா ஷெல் தாக்குதல்: யுக்ரேன் – ரஷ்யா பேச்சு, இன்று திங்கள் காலை தொடங்கும் 0

🕔28.Feb 2022

யுக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் இன்று திங்கள்கிழமை காலை பெலாரஸ் எல்லைக்கு அருகில் தொடங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. (இந்தச் செய்தி எழுதப்படும் போது, இலங்கையில் நேரம் பகல் 12.52, யுக்ரேனில் காலை 9.22 மணி) யுக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர் ஷெலென்ஸ்கி, அடுத்த 24 மணிநேரம் ‘முக்கியமானது’ என்று பிரிட்டிஷ் பிரதமர் பொரிஸ் ஜோன்சனிடம் கூறியுள்ளார். யுக்ரேன்

மேலும்...
ஜெய்லானி பள்ளிவாசல் நுழைவாயில் மினாரா உடைப்பு விவகாரம்: கண்டிக்க வக்கில்லாத முஸ்லிம் அரசியல்வாதிகள்

ஜெய்லானி பள்ளிவாசல் நுழைவாயில் மினாரா உடைப்பு விவகாரம்: கண்டிக்க வக்கில்லாத முஸ்லிம் அரசியல்வாதிகள் 0

🕔28.Feb 2022

– ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் – வர­லாற்று புகழ்­மிக்க கூர­கல தப்தர் ஜெய்­லானி பள்­ளி­வாசல் வளாகத்தில் அமை­யப்­பெற்­றி­ருந்த நுழை­வாயில் மினாராக்­களை தாங்­கி­யி­ருந்த கட்­ட­மைப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் இனந்தெ­ரி­யா­தோரால் அகற்றப்பட்டுள்ளது. பல நூற்றாண்டு பழமை வாய்ந்த இப் பள்ளிவாயலை நோக்கி இனவாதிகளின் பார்வை உள்ளமை யாவரும் அறிந்ததே. அண்மையில் அநுராதபுரத்தில் நடைபெற்றிருந்த பொதுஜன பெரமுனவின்

மேலும்...
வீதி விபத்துக்களில் இரண்டு மாதங்களில் 457 பேர் பலி: பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தகவல்

வீதி விபத்துக்களில் இரண்டு மாதங்களில் 457 பேர் பலி: பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தகவல் 0

🕔28.Feb 2022

வீதி விபத்துக்களில் கடந்த இரண்டு மாதங்களில் 457 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் இம்மாதம் பெப்ரவரி 25 ஆம்திகதி வரையான காலப்பகுதியினுள் நடந்த 434 வீதிவிபத்துக்களில், இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இவற்றில் மோட்டார் சைக்கிள் விபத்துக்கள்

மேலும்...
ரஷ்ய அணு ஆயுதப் படையினரை தயார் நிலையில் இருக்குமாறு புடின் அறிவுறுத்தியுள்ள நிலையில், பேச்சுக்கு தயார் என யுக்ரேன் அறிவிப்பு

ரஷ்ய அணு ஆயுதப் படையினரை தயார் நிலையில் இருக்குமாறு புடின் அறிவுறுத்தியுள்ள நிலையில், பேச்சுக்கு தயார் என யுக்ரேன் அறிவிப்பு 0

🕔27.Feb 2022

ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் என யுக்ரேன் அறிவித்துள்ளது. உக்ரைன்- பெலாரஸ் எல்லையில் ‘முன்நிபந்தனைகள் இல்லாமல்’ பேச்சுவார்த்தைக்கு அதிகாரிகள் குழுவை அனுப்பும் என்று யுக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஷெலென்ஸ்கி கூறியுள்ளர். இது இவ்வாறிருக்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், ரஷ்யாவின் அணுசக்தி படைகளை உஷார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். இதேவேளை ரஷ்யப் படைகளுடனான சண்டையின் பின்னர், நாட்டின்

மேலும்...
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக் கோரும்  போராட்டம்: அஹ்னாப் மற்றும் குடும்பத்தாரும் கையெழுத்திட்டனர்

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக் கோரும் போராட்டம்: அஹ்னாப் மற்றும் குடும்பத்தாரும் கையெழுத்திட்டனர் 0

🕔26.Feb 2022

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு கோரி மன்னாரில் இன்றைய தினம் (26) கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மன்னார் பேருந்து நிலையத்தில் இலங்கை தமிரசுக் கட்சியின் ஏற்பாட்டில் இந்த கையெழுத்து போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இன்றைய கையெழுத்து போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், ரா. சாணக்கியன், சார்ள்ஸ் நிர்மலநாதன், மதத்தலைவர்கள் மற்றும் பொதுமக்கள்

மேலும்...
யுக்ரைனுக்கு அமெரிக்கா அணு ஆயுதங்களை வழங்கியது: சீனா குற்றச்சாட்டு

யுக்ரைனுக்கு அமெரிக்கா அணு ஆயுதங்களை வழங்கியது: சீனா குற்றச்சாட்டு 0

🕔25.Feb 2022

யுக்ரைனுக்கு அமெரிக்கா அணுவாயுதங்களை வழங்கியதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹுவா சுனிங் ஊடகவியலாளர்கள் சந்திப்பொன்றில் போது இதனைக் கூறியுள்ளார். ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு முன்னதாக அமெரிக்கா – யுக்ரைனுக்கு 05 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான அணு ஆயுதங்களை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவற்றின் எடை 1,000 மெட்ரிக் டொன்னுக்கும் அதிகமாகும்

மேலும்...
சம்மாந்துறை; ஊருக்குள் பிரவேசிக்க முயன்ற நூற்றுக்கணக்கான யானைகள்: வனவிலங்கு அதிகாரிகள் விரட்டியடிப்பு

சம்மாந்துறை; ஊருக்குள் பிரவேசிக்க முயன்ற நூற்றுக்கணக்கான யானைகள்: வனவிலங்கு அதிகாரிகள் விரட்டியடிப்பு 0

🕔25.Feb 2022

– பாறுக் ஷிஹான் – சம்மாந்துறை ஊடாக மஜீட்புரம் பகுதிகளை ஊடறுத்து நேற்று வியாழக்கிழமை (24) மாலை திடீரென ஊருக்குள் பிரவேசிக்க முயன்ற சுமார் 100 க்கும் அதிகளவான யானைகளை அவ்விடத்தில் இருந்து விரட்டுவதற்கான துரித  நடவடிக்கைகளை வனவிலங்குகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டனர். நேற்று மாலை முதல் இரவு வரை, குறித்த யானைகள் நகர்ந்து செல்லாமல் ஒரே

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்