Back to homepage

Tag "பாடசாலை"

பாடசாலை மாணவர்களுக்கான ‘சுரக்ஷா’ காப்புறுதி திட்டம் மீண்டும் நடைமுறைக்கு வருகிறது

பாடசாலை மாணவர்களுக்கான ‘சுரக்ஷா’ காப்புறுதி திட்டம் மீண்டும் நடைமுறைக்கு வருகிறது 0

🕔19.May 2024

பொருளாதார நெருக்கடி காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த ‘சுரக்ஷா’ மாணவர் காப்புறுதித் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்குமாறு – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி, நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களும் ஜூன் முதல் வாரத்தில் இருந்து இந்தக் காப்புறுதி திட்டத்தின் கீழ் நன்மைகளைப் பெற முடியும். இது தொடர்பில் நிதி,பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய

மேலும்...
சப்ரகமுகவ மாகாணத்தில், 1080 பாடசாலைகளில் 4600 ஆசிரியர் வெற்றிடங்கள்

சப்ரகமுகவ மாகாணத்தில், 1080 பாடசாலைகளில் 4600 ஆசிரியர் வெற்றிடங்கள் 0

🕔13.May 2024

சப்ரகமுவ மாகாணத்தில் 4600 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 1080 பாடசாலைகளில் இந்த ஆசிரியர் வெற்றிடங்கள் உள்ளதாகவும் அமைச்சு கூறியுள்ளது. இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, சப்ரகமுவ மாகாண கல்வியமைச்சின் செயலாளர் சாமர பமுனுஆராச்சி தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக 425 பாடசாலைகளிலுள்ள வெற்றிடங்கள் நிரப்பப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி

மேலும்...
வெப்ப காலத்தில் ‘டை’ அணியாமலிருப்பதற்கான அனுமதி வழங்கப்படுவது, பாடசாலை மாணவர்களுக்கு ஆறுதலாக அமையும்

வெப்ப காலத்தில் ‘டை’ அணியாமலிருப்பதற்கான அனுமதி வழங்கப்படுவது, பாடசாலை மாணவர்களுக்கு ஆறுதலாக அமையும் 0

🕔29.Apr 2024

நாட்டில் கடுமையான வெப்பம் நிலவி வரும் நிலையில் – அதன் பாதிப்பிலிருந்து ஓரளவாயினும் விடுபடுவதற்கான நடவடிக்கைகளை பாடசாலைகள் மேற்கொள்தல் வேண்டும். தற்போதைய காலகட்டத்தில் மாணவர்கள் ‘டை’ (Tie) அணியாமல் இருப்பதற்கான அனுமதியை பாடசாலை நிர்வாகம் வழங்குமாயின், மாணவர்களுக்கு அது ஓரளவு ஆறுதலாக இருக்கும். மேலும் விளையாட்டுப் போட்டிகளுக்கான தெரிவுகளும் – சில பாடசாலைகளில் நடைபெற்று வருகின்றன.

மேலும்...
மாணவர்களுக்கு இன்று தொடக்கம் காலை உணவு: 16 பில்லியன் ரூபாய்க்கும் அதிக தொகை ஒதுக்கீடு

மாணவர்களுக்கு இன்று தொடக்கம் காலை உணவு: 16 பில்லியன் ரூபாய்க்கும் அதிக தொகை ஒதுக்கீடு 0

🕔25.Mar 2024

பாடசாலை மாணவர்களுக்கு இன்று (25) முதல் காலை உணவை வழங்குவதற்கு கல்வி அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது. ஊட்டச்சத்து நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு காலை 7.30 முதல் 8.30 வரை இந்த காலை உணவு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு 16.6 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி 9,134 அரச பாடசாலைகளிலுள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு

மேலும்...
மாதவிடாய்  நாப்கின்களை பாடசாலை மாணவிகளுக்கு இலவசமாக வழங்கும் திட்டம், ஏப்ரல் முதல் அறிமுகம்

மாதவிடாய் நாப்கின்களை பாடசாலை மாணவிகளுக்கு இலவசமாக வழங்கும் திட்டம், ஏப்ரல் முதல் அறிமுகம் 0

🕔22.Mar 2024

பாடசாலை மாணவிகளுக்கு மாவிடாய் காலத்துக்குரிய சானிட்டரி நாப்கின்களை இலவசமாக வழங்கும் வேலைத்திட்டம் இந்த வருடம் ஏப்ரல் மாதம் தொடக்கம் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அதன்படி, ஆறாம் வகுப்புக்கு மேல் உள்ள 08 லட்சம் மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின்களை வழங்க கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது என்றும், இதற்கான வவுச்சர்கள் வழங்கப்படும்

மேலும்...
மாணவர்களுக்கு ஊடகப் பாவனை அறிவை வழங்கும் திட்டம், ஜனாதிபதி அலுவலகத்தில் ஆரம்பம்

மாணவர்களுக்கு ஊடகப் பாவனை அறிவை வழங்கும் திட்டம், ஜனாதிபதி அலுவலகத்தில் ஆரம்பம் 0

🕔13.Mar 2024

பாடசாலை மாணவர்களுக்கு பல்வேறு ஊடக பாவனைகள் தொடர்பான நடைமுறை அறிவையும் அனுபவத்தையும் வழங்கும் நோக்கில் ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள “Kaledoscope 2024 Screen media for Gen-Z” ஊடகத் திட்டம் நேற்று (12) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஜனாதிபதி செயலகம், கல்வி அமைச்சு,

மேலும்...
மாணவர்களின் ‘சுமை’யைக் குறைக்க நடவடிக்கை

மாணவர்களின் ‘சுமை’யைக் குறைக்க நடவடிக்கை 0

🕔1.Mar 2024

மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்ட ‘பயிற்சி புத்தகம்’ தவிர மற்றைய பாடப்புத்தகங்களை பாடசாலைக்கு கொண்டு வருவதை குறைப்பதற்கு, கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி அதிபரின் நேரடிக் கண்காணிப்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, கல்விச் செயலாளர் வசந்தா பெரேரா வழிகாட்டுதல்கள் சிலவற்றை வௌியிட்டுள்ளார். பாடசாலை புத்தகப் பையின் எடை அதிகரிப்பினால் பாடசாலை மாணவர்களுக்கு முதுகுத்தண்டு பாதிப்புகள் போன்ற

மேலும்...
ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டம்: 3600 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டம்: 3600 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு 0

🕔25.Feb 2024

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவின் பேரில் – பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு ஊக்குவிப்புகளை வழங்கும் நோக்கத்துக்காக, ‘ஜனாதிபதி கல்வி புலமைப்பரிசில் 2024/2025’ திட்டம் ஒன்றை, ஜனாதிபதி நிதியம் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன்படி, மொத்தமாக இலங்கையில் உள்ள 10,126 பாடசாலைகளையும் உள்ளடக்கிய வகையில், தரம் 01 முதல் தரம் 11 வரை கல்வி கற்கும் ஒரு

மேலும்...
கல்வித் துறையை டிஜிட்டல் மயமாக்கும் திட்டம் மார்ச் ஆரம்பம்; ஆசிரியர்களை பயிற்றுவிக்க ‘மைக்ரோசொப்ட்’ ஆதரவு

கல்வித் துறையை டிஜிட்டல் மயமாக்கும் திட்டம் மார்ச் ஆரம்பம்; ஆசிரியர்களை பயிற்றுவிக்க ‘மைக்ரோசொப்ட்’ ஆதரவு 0

🕔19.Feb 2024

கல்வித்துறையை டிஜிட்டல் மயமாக்குவதற்கான முன்னோடித் திட்டத்தை மார்ச் மாதம் ஆரம்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த் தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலை பாடப்புத்தகங்களை விநியோகத்திற்காக அனுப்பும் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (19) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கல்வி அமைச்சர் கலாநிதி

மேலும்...
பாடசாலைக்கு சூட்டப்பட்டுள்ள கெஹலியவின் பெயரை நீக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை

பாடசாலைக்கு சூட்டப்பட்டுள்ள கெஹலியவின் பெயரை நீக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை 0

🕔8.Feb 2024

கல்வி அமைச்சின் சுற்றறிக்கையை மீறி குண்டசாலையில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் பெயர் சூட்டப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. கல்வி அமைச்சின் 1996ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படி உயிருள்ள ஒருவரின் பெயரை பாடசாலைகளுக்கு சூட்ட முடியாது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், உயிருடன்

மேலும்...
ஆரம்ப பிரிவு மாணவர்கள் அனைவருக்கும் மதிய உணவு: ஒருவருக்கு தலா 110 ரூபாய் ஒதுக்கீடு

ஆரம்ப பிரிவு மாணவர்கள் அனைவருக்கும் மதிய உணவு: ஒருவருக்கு தலா 110 ரூபாய் ஒதுக்கீடு 0

🕔2.Feb 2024

அரச பாடசாலைகளின் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு மதிய உணவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஆரம்ப பிரிவு வகுப்புகளிலுள்ள சகல மாணவர்களுக்கும் இந்த வருடம் மார்ச் மாதம் முதல் மதிய உணவு வழங்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார். இந்த திட்டத்துக்காக அரசாங்கம் சுமார் 16 பில்லியன் ரூபாய் ஒதுக்கியுள்ளதாகவும்,

மேலும்...
இஸ்ரேல் தாக்குதலில் 04 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பலஸ்தீன் மாணவர்கள் படுகொலை

இஸ்ரேல் தாக்குதலில் 04 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பலஸ்தீன் மாணவர்கள் படுகொலை 0

🕔9.Jan 2024

காஸா மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் ஒக்டோபர் 07ஆம் திகதிக்குப் பின்னர் 4,296 மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 8,059 பேர் காயமடைந்துள்ளதாகவும் பாலஸ்தீனிய கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. காஸாவில் 4,257 மாணவர்களும், மேற்குக் கரையில் 39 மாணவர்களும் கொல்லப்பட்டதாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. காஸாவில், 281 அரசாங்கப் பாடசாலைகளும் 65 அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண

மேலும்...
பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வியமைச்சு அறிவிப்பு

பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வியமைச்சு அறிவிப்பு 0

🕔21.Dec 2023

அரச மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைககளின் 2023ஆம் ஆண்டுக்கான மூன்றாம் கல்வி தவணைக்குரிய விடுமுறை காலத்தை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி, 2023 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் கல்விப் பருவத்தின் முதல் கட்டம் 2023 டிசம்பர் 22 வெள்ளிக்கிழமை முடிவடைகிறது. 2023 ஆம் ஆண்டிற்கான மூன்றாம் கல்விப் பருவத்தின் இரண்டாம் கட்டம் அடுத்த வருடம்

மேலும்...
போதைப்பொருள் குற்றங்களுக்காக 123000 பேர் கைது

போதைப்பொருள் குற்றங்களுக்காக 123000 பேர் கைது 0

🕔9.Dec 2023

போதைப்பொருள் குற்றங்களுக்காக கிட்டத்தட்ட 1 லட்சத்து 23 ஆயிரம் பேர், இந்த வருடத்தில் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ளது. இந்தக் கைதுகளின் போது 61 கிலோ ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் ஷாக்ய நாணயக்கார கூறியுள்ளார். போதைப்பொருள் தொடர்பில் இதுவரை

மேலும்...
பாடசாலை மாணவர்களுக்கு 30 சதவீத விலைத் தள்ளுபடியில் பயிற்சிப் புத்தகங்கள்: அரச அச்சகக் கூட்டுத்தாபனம் வழங்குகிறது

பாடசாலை மாணவர்களுக்கு 30 சதவீத விலைத் தள்ளுபடியில் பயிற்சிப் புத்தகங்கள்: அரச அச்சகக் கூட்டுத்தாபனம் வழங்குகிறது 0

🕔3.Nov 2023

பாடசாலை பயிற்சிப் புத்தகங்களை தள்ளுபடி விலைத் திட்டத்தில் அரச அச்சகக் கூட்டுத்தாபனம் வழங்குகிறது. பாடசாலை பயிற்சி புத்தகங்களை 30% விலைத் தள்ளுபடியுடன் வழங்கப்படும் என கூட்டுத்தபானத்தின் தலைவர் நிமல் தர்மரத்ன தெரிவித்துள்ளார். விலைத் தள்ளுபடி திட்டம் நேற்று தொடங்கப்பட்டது என்று கூறிய அவர், அரச அச்சகக் கூட்டுத்தாபன தலைமை அலுவலகம் அல்லது அதன் விற்பனை கிளைகளில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்