ஆரம்ப பிரிவு மாணவர்கள் அனைவருக்கும் மதிய உணவு: ஒருவருக்கு தலா 110 ரூபாய் ஒதுக்கீடு
அரச பாடசாலைகளின் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு மதிய உணவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
ஆரம்ப பிரிவு வகுப்புகளிலுள்ள சகல மாணவர்களுக்கும் இந்த வருடம் மார்ச் மாதம் முதல் மதிய உணவு வழங்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.
இந்த திட்டத்துக்காக அரசாங்கம் சுமார் 16 பில்லியன் ரூபாய் ஒதுக்கியுள்ளதாகவும், ஒரு மாணவருக்கு ஒரு நாளைக்கு 110 ரூபாய் செலவிட எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.