இஸ்ரேல் தாக்குதலில் 04 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பலஸ்தீன் மாணவர்கள் படுகொலை

🕔 January 9, 2024

காஸா மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் ஒக்டோபர் 07ஆம் திகதிக்குப் பின்னர் 4,296 மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 8,059 பேர் காயமடைந்துள்ளதாகவும் பாலஸ்தீனிய கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

காஸாவில் 4,257 மாணவர்களும், மேற்குக் கரையில் 39 மாணவர்களும் கொல்லப்பட்டதாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காஸாவில், 281 அரசாங்கப் பாடசாலைகளும் 65 அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் வேலை பணியகத்துடன் (UNRWA) இணைக்கப்பட்ட பாடசாலைகளும் குண்டுவீசி அழிக்கப்பட்டுள்ளன.

இதன் விளைவாக 83 கட்டடங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதோடு, 07 கட்டடங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்