219 ‘வெறி’யர்கள், ஒரே நாளில் கைது

219 ‘வெறி’யர்கள், ஒரே நாளில் கைது 0

🕔11.Apr 2016

மது போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டும் 219 பேர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். மோட்டார் சைக்கிள் சாரதிகளே இவர்களில் அதிகமானோர் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார். தமிழ் – சிங்கள சித்திரை புத்தாண்டை முன்னிட்டு வாகன விபத்துக்களை குறைக்கும் நோக்கில், மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை

மேலும்...
புலித் தொப்பியை லண்டனுக்கு அனுப்ப முயற்சித்தவர்களுக்கு விளக்க மறியல்

புலித் தொப்பியை லண்டனுக்கு அனுப்ப முயற்சித்தவர்களுக்கு விளக்க மறியல் 0

🕔11.Apr 2016

புலிகளின் உயர் மட்டத் தலைவர்கள் பயன்படுத்தும் தொப்பியை வெளிநாட்டுக்கு அனுப்ப முயற்சித்தார்கள் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள இருவரும், எதிர்வரும் 20 ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார். கொழும்பு நரேஹேன்பிட்டி பகுதியிலுள்ள விரைவு தபால் தலைமையகத்தில் வைத்து, லண்டனுக்கு அனுப்புவதற்கு தயாராக

மேலும்...
பழமையின் ருசி

பழமையின் ருசி 0

🕔11.Apr 2016

– மப்றூக் – ‘ஆசியார்’ என்றுதான் அவரை பலரும் அழைப்பார்கள். அவர் ஒரு மீன் வியாபாரி. சொந்த இடம் அட்டாளைச்சேனை. அற்புதமான பொல்லடிக் கலைஞர். ஊரில் பாரம்பரிய கலை விழாக்கள் நடைபெறும் போது, பொல்லடி நிகழ்வுகளும் தவறாமல் இடம்பெறும். பொல்லடி நிகழ்வுகள் இருந்தால் – அங்கே ஆசியார் இருப்பார். ஆனால், இப்போது ஆசியார் இல்லை. அவர்

மேலும்...
கொழும்பு துறைமுக நகரம், சீனாவுக்கு குத்தகையாகவே வழங்கப்படும்: பிரதமர் ரணில் விளக்கம்

கொழும்பு துறைமுக நகரம், சீனாவுக்கு குத்தகையாகவே வழங்கப்படும்: பிரதமர் ரணில் விளக்கம் 0

🕔10.Apr 2016

கொழும்பு துறைமுக நகரத் திட்டமானது சீனாவுக்கு  குத்தகை அடிப்படையிலேயே வழங்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரத்தை உலக பொருளாதாரத்தின் தரத்துக்கு முன்னேற்றிக் கொண்டு செல்வதே தமது நோக்கமென்றும் அவர் கூறினார். சீன விஜயத்தை நிறைவுசெய்து இன்று ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்பிய பிரதமர் ரணில், சீன விஜயம் குறித்து தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை தமது உத்தியோகபூர்வ

மேலும்...
18 மாதங்களில் 108 கிலோ எடை குறைப்பு; அம்பானியின் மகன் அசத்தினார்

18 மாதங்களில் 108 கிலோ எடை குறைப்பு; அம்பானியின் மகன் அசத்தினார் 0

🕔10.Apr 2016

இந்தியாவின் ‘ரிலையன்ஸ்’ நிறுவன தலைவரும், உலகிலுள்ள பெரும் பணக்காரர்களில் ஒருவருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானி, கடந்த 18 மாதங்களில் தனது உடல் எடையில் 108 கிலோ எடையை குறைத்துள்ளமையானது, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதற்காக அவர் பல கடும் முயற்சிகளை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. தினமும் 21 கிலோ மீட்டர் நடைபயணம் மேற்கொண்ட அனந்த்

மேலும்...
முச்சக்கர வண்டியில், ஒலிபெருக்கிகளை அதிக சத்தமாக ஒலிக்கச் செய்த நபருக்கு அபராதம்

முச்சக்கர வண்டியில், ஒலிபெருக்கிகளை அதிக சத்தமாக ஒலிக்கச் செய்த நபருக்கு அபராதம் 0

🕔10.Apr 2016

– க. கிஷாந்தன் – முச்சக்கர வண்டியில் பொருத்தப்பட்டுள்ள ஒலி பெருக்கிகளை ஆகக் கூடிய சத்தத்துடன் ஒலிக்கச் செய்த சாரதியை கடுமையான  எச்சரிக்கை செய்த நீதிபதி, அந்நபருக்கு மூவாயிரம் ரூபாவினை அபராதமாக விதித்தார். பதுளை நீதவான் நீதிமன்றத்தில் மேற்குறிப்பிட்ட முச்சக்கர வண்டியின் சாரதி நேற்று முன்தினம் ஆஜர் செய்யப்பட்டபோது, பதில் நீதிபதி எஸ். சத்தியமூர்த்தி கடுமையாக எச்சரித்ததுடன் மூவாயிரம் ரூபாவினை அபராதமாகவும் விதித்தார்.

மேலும்...
அட்டாளைச்சேனை வைத்தியசாலை தரமுயர்த்தப்பட்டுள்ளதாக, அமைச்சர் நசீர் தெரிவிப்பு

அட்டாளைச்சேனை வைத்தியசாலை தரமுயர்த்தப்பட்டுள்ளதாக, அமைச்சர் நசீர் தெரிவிப்பு 0

🕔10.Apr 2016

– மப்றூக் – அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலை, ஆதார வைத்தியசாலையாகத் தயமுயர்த்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் தெரிவித்தார். குறித்த வைத்தியசாலையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு 40 மில்லியன் ரூபாவினையும், மத்திய அரசின் சுகாதார அமைச்சு 40 மில்லியன் ரூபாவினையும் ஒதுக்கியுள்ளதாகவும் அவர் கூறினார். அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலை,

மேலும்...
கேரளாவில் வெடி விபத்து; 86 பேர் பலி, 350 பேர் காயம்

கேரளாவில் வெடி விபத்து; 86 பேர் பலி, 350 பேர் காயம் 0

🕔10.Apr 2016

இந்தியாவின் கேரளத்திலுள்ள கொல்லம் அருகிலுள்ள கோயிலில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.00 மணியளவில் இடம்பெற்ற வெடி விபத்து காரணமாக 86 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, விபத்தில் சிக்கி 350 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கேரள மாநிலம் கொல்லம் அருகேயுள்ள பரவூர் புட்டிங்கல் தேவி  எனும் கோயிலிலுள்ள பட்டாசுக் களஞ்சியத்தில் தீப்பற்றியமை காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மேற்படி

மேலும்...
உள்ளுராட்சி தேர்தலை பகுதி பகுதியாகவும், அவசரப்பட்டும் நடத்த முடியாது: அமைச்சர் பைசர் முஸ்தபா

உள்ளுராட்சி தேர்தலை பகுதி பகுதியாகவும், அவசரப்பட்டும் நடத்த முடியாது: அமைச்சர் பைசர் முஸ்தபா 0

🕔9.Apr 2016

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்துவதில் பல பிரச்சினைகள் காணப்படுவதாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார். சிலர் கூறுவகின்றமைபோல் – பகுதி பகுதியாக தேர்தல்களை நடத்துவதில் சட்ட சிக்கல்கள் காணப்படுவதாகவும் அவர் கூறினார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறுகையில்;

மேலும்...
சொந்த தேவைக்கு அரசாங்க விமானங்களைப் பயன்படுத்தியமை தொடர்பில், பஷிலிடம் விசாரணை

சொந்த தேவைக்கு அரசாங்க விமானங்களைப் பயன்படுத்தியமை தொடர்பில், பஷிலிடம் விசாரணை 0

🕔9.Apr 2016

பஷில்ராஜபக்ஷ அமைச்சராக இருந்த காலப்பகுதியில் தனது சொந்த பிரயாணங்களுக்காக விமானப்படைக்கு சொந்தமான விமானங்களை பயன்படுத்தினார் எனும் முறைப்பாடு தொடர்பில், நேற்று வெள்ளிக்கிழஙமை அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் பஷில் நேற்று வெள்ளிக்கிழமை ஆஜரான போது, சுமார் 05 மணிநேரம் அவரிடம் மேற்படி விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இலங்கை

மேலும்...
மஹிந்தவுக்கான ராணுவப் பாதுகாப்பை நீக்கும் தீர்மானம்; இடைநிறுத்தினார் ஜனாதிபதி

மஹிந்தவுக்கான ராணுவப் பாதுகாப்பை நீக்கும் தீர்மானம்; இடைநிறுத்தினார் ஜனாதிபதி 0

🕔9.Apr 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ராணுவப் பாதுகாப்பினை நீக்கும்தீர்மானத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இடைநிறுத்தியுள்ளார். மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்டுள்ள ராணுவப்பாதுகாப்பினை அகற்றி அதற்கு பதிலாக பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்த பாதுகாப்புஅமைச்சு தீர்மானித்திருந்தது. எனினும் இந்த தீர்மானத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இடைநிறுத்துமாறு பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவித்துள்ளார். இதன்படி தமது பாதுகாப்புக்கென நியமிக்கப்படடுள்ள 103 ராணுவஉத்தியோகத்தர்களும், கடமையில் தொடர்ந்தும்

மேலும்...
மஹிந்தவுக்கு அரச மாளிகை

மஹிந்தவுக்கு அரச மாளிகை 0

🕔8.Apr 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பயன்பாட்டிற்காக அரச மாளிகையொன்று கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு, விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள பொது நிர்வாக அமைச்சுக்கு சொந்தமான மாளிகையே இவ்வாறு வழங்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார சமர்ப்பித்த ஆவணமொன்றில், இது தொடர்பாகக் கூறப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷவின் பயன்பாட்டுக்காக 2015ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 28ஆம்

மேலும்...
மு.கா. செயலாளர் அரசியலில் ஈடுபடக் கூடாது என்றால், தலைவருக்கும் அது பொருந்த வேண்டும்: ஹசன் அலி

மு.கா. செயலாளர் அரசியலில் ஈடுபடக் கூடாது என்றால், தலைவருக்கும் அது பொருந்த வேண்டும்: ஹசன் அலி 0

🕔8.Apr 2016

முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சியின் செய­லாளர் அர­சி­யலில் ஈடு­ப­டக்­கூ­டாது என்றும் நாடா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வியில் மோகம் கொள்­ளக்­கூ­டாது என்றும் அந்தக் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரி­விப்­பது தவறாகும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் செய­லாளர் எம்.ரி.ஹசன் அலி தெரி­வித்துள்ளார். அவ்­வா­றெனில் கட்­சியின் தலை­வரும் – நாடாளு­மன்ற உறுப்­பினர்  பதவியில் மோகம் கொள்ளக் கூடாது என்றும் ஹசன் அலி

மேலும்...
ஓய்வு பெறும் பொலிஸ் மா அதிபருக்கு, ராணுவ மரியாதையுடனான பிரியாவிடை

ஓய்வு பெறும் பொலிஸ் மா அதிபருக்கு, ராணுவ மரியாதையுடனான பிரியாவிடை 0

🕔8.Apr 2016

பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்கக்கோன் ஓய்வு பெற்றுக் செல்லவுள்ளமையினால், அவருக்கு இன்று வெள்ளிக்கிழமை ராணுவ மரியாதையுடனான பிரியாவிடை வழங்கப்பட்டது. இந் நிகழ்வு ராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்றது. பொலிஸ் மா அதிபர் இலங்கக்கோன் எதிர்வரும் வாரத்துடன் பொலிஸ் சேவையிலிருந்து ஓய்வுபெறுகின்றார். இதனையடுத்து, ராணுவத் தளபதி கிரிசாந்த சில்வாவுக்கும் ஓய்வுபெறும் பொலிஸ் மா அதிபருக்குமான சந்திப்பொன்று இன்று

மேலும்...
கல்முனையில் சுகாதார தின ஊர்வலம்; அமைச்சர் நசீர், துண்டுப் பிரசுரம் விநியோகித்தார்

கல்முனையில் சுகாதார தின ஊர்வலம்; அமைச்சர் நசீர், துண்டுப் பிரசுரம் விநியோகித்தார் 0

🕔8.Apr 2016

– ஏ.எல்.எம். சினாஸ் –உலக சுகாதார தினத்தையொட்டி கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம், கல்முனை நகரில் நேற்று வியாழக்கிழமை ஏற்பாடு செய்த விழிப்புணர்வு ஊர்வலத்தில், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர்  கலந்து கொண்டார்.இதன்போது, ஆரோக்கிய விழிப்புணர்வினை ஏற்படுத்தும் துண்டுப் பிரசுரங்களை, பொதுமக்களுக்கு  சுகாதார அமைச்சர் நசீர் வழங்கினார்.பிராந்திய சுகாதார சேவைகள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்