ஜனாதிபதியின் மரணத்துக்கு திகதி குறித்த ஜோதிடர், நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சி 0
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இம் மாதம் 26ஆம் திகதி மரணமாவார் எனத் தெரிவித்த ஜோதிடர், நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் 26ஆம் திகதி இடம்பெறும் கிரக மாற்றத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உயிராபத்து உள்ளதாக, ஜோதிடர் விஜித ரோஹன விஜயமுனி என்பவர் கூறியிருந்தார். இதன்படி, ஜனாதிபதி உயிரிழக்கவுள்ளதாக பிரசாரம் மேற்கொண்டமையினூடாக,