விமானப்படை விமானி, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது

🕔 January 17, 2017

Arrested - 01லங்கை விமானப்படையின் லெப்டினன்ட் தரத்தையுடைய விமானியொருவர், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்டார்.

சுங்க அதிகாரிகள் – இவரைக் கைது செய்ததாக, விமான நிலைய சுங்கப் பிரிவு பிரதிப் பணிப்பாளர் பராக்கிரம பஸ்நாயக்க தெரிவித்தார்.

வெளிநாட்டு மதுபான போத்தல்களை நாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்த போதே, இவர் கைது செய்யப்பட்டதாக பிரதிப் பணிப்பாளர் மேலும் கூறினார்.

இவரைக் கைது செய்யும் போது, 08 மதுபான போத்தல்கள் இவரிடம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

ஏற்கனவே, இந்த விமானி இவ்வாறு 40 மதுபான போத்தல்களை தனது 05 பயணங்களின் போது கடத்தி வந்ததாக விசாரணைகளிலிருந்து தெரியவருகிறது. இவ்வாறு இவர் கடத்திய மதுபான போத்தல்களை, இந்தியாவைச் சேர்ந்த பயணிகள், விமான நிலையத்துக்கு வெளியில் வைத்துக் கையளித்தாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் – கைது செய்யப்பட்ட விமானி, விமானப்படை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்