அதாஉல்லா: கலைத்து விடப்பட்ட கோலம் 0
‘நடக்கும் என்பார் நடக்காது, நடக்காதென்பார் நடந்து விடும். கிடைக்கும் என்பார் கிடைக்காது, கிடைக்காதென்பார் கிடைத்து விடும்’ என்று, தாயைக் காத்த தனயன் திரைப்படத்தில் ஒரு பாடல் இருக்கிறது. கவியரசர் கண்ணதாஸன் அந்தப் பாடலுக்குச் சொந்தக்காரர்.ஆயிரத்தெட்டு எதிர்பார்ப்புகள், எதிர்வு கூறல்கள், அனுமானங்களுக்கு மத்தியில் நடந்து முடிந்திருக்கிறது நாடாளுமன்றப் பொதுத் தேர்தல். நடக்கும் என்று நாம் எதிர்பார்த்த எத்தனையோ