க.பொ.த. சா/த பரீட்சை; விஞ்ஞான, ஆங்கில பாடங்களில் எந்தவொரு மாணவருக்கும் அநீதி நடக்காது: கல்வியமைச்சர் உறுதி

🕔 May 13, 2024

.பொ.த சாதாரண தர விஞ்ஞானம் மற்றும் ஆங்கில வினாத்தாள் தொடர்பான சர்ச்சையை நாடாளுமன்றில் தெளிவுபடுத்திய கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, எந்தவொரு மாணவர்களுக்கும் அநீதி ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி கவிரத்னவின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், விஞ்ஞான பாடத்துக்கான வினாத்தாளிலுள்ள கேள்விகள் மற்றும் தெரிவு வினாக்களில் சிக்கல்கள் உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், விஞ்ஞான வினாத்தாள் தயாரித்தவர்கள் கூடி இறுதி முடிவு எடுப்பார்கள் எனவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

இந்த ஆண்டு ஆங்கில வினாத்தாள் கட்டமைப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், பயிற்சி பெற்ற ஆங்கில ஆசிரியர்கள் இல்லாத கிராமப்புறங்களில் உள்ள பெரும்பாலான மாணவர்களுக்கு இது நியாயமற்றது என – நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி கவிரத்ன நாடாளுமன்றில் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர்; மாணவர்களுக்கு எந்த வித அநீதியும் ஏற்படாத வகையில், மதிப்பெண் திட்டத்தை தயாரிக்கும் போது, இந்த விடயங்கள் குறித்து விசேட கவனம் செலுத்துவதாக பரீட்சைகள் ஆணையாளர் உறுதியளித்துள்ளதாகவும் நாடாளுமன்றில் மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்