மைத்திரி நன்றி மறந்து விட்டார்; அமைச்சர் ஹரீன் குத்தல் பேச்சு 0
மைத்திரிபால சிறிசேன நன்றி மறந்து விட்டார் எனும் அர்த்தத்தில், ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடக மற்றும் தொடர்பாடல் துறை பிரதானியும் அமைச்சருமான ஹரீன் பெணான்டோ குத்தல் தனமான கருத்தொன்றினை வெளியிட்டுள்ளார். “சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்களை ஜனாதிபதியாக்கியது ஐக்கிய தேசியக் கட்சியாகும். எனினும் தற்போது அதனை ஒரு சிலர் மறந்துவிட்டனர். அதனை நாம் மீண்டும் நினைவூட்டுவதற்கு சத்தியத்துடன் களமிறங்கவுள்ளோம்”