ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் பதவியை, ராஜிநாமா செய்கிறார் கபீர் ஹாசிம்

🕔 April 5, 2018

மைச்சர் கபீர் ஹாசிம், ஐக்கிய தேசியக் கட்சியில் தான் வகிக்கும் செயலாளர் பதவியை இன்று வியாழக்கிழமை ராஜிநாமா செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் மேற்கொள்ளப்படவிருக்கும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காகவே, அவர் தனது பதவியை ராஜிநாமா செய்யவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதற்கிணங்க, தனது பதவி விலகல் கடிதத்தை ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம்  இன்று ஒப்படைக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளராகப் பதவி வகித்த திஸ்ஸ அத்தநாயக்க, அவரின் பதவியை ராஜிநாமா செய்து விட்டு, கடந்த மஹிந்த அரசாங்கத்துடன் இணைந்தமையினை அடுத்து, 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 08ஆம் திகதி, ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளராக கபீர் ஹாசிம் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்