ஜனாதிபதியிடம் மன்னிப்புக் கோரினார் சரத் பொன்சேகா

🕔 May 9, 2018

மைச்சர் சரத் பொன்சேகா – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மன்னிப்புக் கோரியதாகத் தெரியவருகிறது.

இன்று புதன்கிழமை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்ற பின்னர், ஜனாதிபதியிடம் அவர் மன்னிப்புக் கோரியுள்ளார்.

பிழையான ஒருவரை ஜனாதிபதியாகத் தெரிவு செய்தமையின் காரணமாக, ஐக்கிய தேசியக் கட்சிக்கும் நாட்டுக்கும் துன்பம் ஏற்பட்டுள்ளதாக, கடந்த 06ஆம் திகதி இடம்பெற்ற ஐ.தே.கட்சியின் மே தினக் கூட்டத்தில் பீட்ல் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளும் சுதந்திரக் கட்சியினுள்ளும் இந்த உரை தொடர்பில் பாரிய எதிர்ப்புக் கிளம்பியது.

இதனையடுத்து, ஜனாதிபதியிடம் அமைச்சர் பொன்சேகா மன்னிப்புக் கோருவார் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியிருந்தார்.

இந்த நிலையிலேயே இன்று ஜனாதிபதியிடம் சரத் பொன்சேகா மன்னிப்புக் கோரியதாகத் தெரியவருகிறது.

தொடர்பான செய்தி: ஜனாதிபதியை விமர்சித்த விவகாரம்: மன்னிப்புக் கோருமாறு, சரத் பொன்சேகாவுக்கு அழுத்தம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்