க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை ஆரம்பமானது
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பமானது. குறித்த பரீட்சை இன்று (06) முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நடைபெறும்.
452,979 பரீட்சார்த்திகள் நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3,527 பரீட்சை நிலையங்களில் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் எம். ஜீவராணி புனிதா தெரிவித்துள்ளார்.
அத்துடன் விசேட தேவையுடைய பரீட்சார்த்திகளுக்காக விசேட பரீட்சை நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்டை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.