Back to homepage

Tag "பரீட்சைகள் திணைக்களம்"

க.பொ.த சா/த பரீட்சை; மே 06இல் ஆரம்பம்: அனுமதி அட்டைகள் அடுத்த வாரம் விநியோகம்

க.பொ.த சா/த பரீட்சை; மே 06இல் ஆரம்பம்: அனுமதி அட்டைகள் அடுத்த வாரம் விநியோகம் 0

🕔17.Apr 2024

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான – பரீட்சை அனுமதி அட்டைகள் அடுத்த வாரம் தொடக்கம் விநியோகிக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, பாடசாலை விண்ணப்பதாரிகள் தமது பாடசாலைகளின் அதிபர்களினூடாக பரீட்சை அனுமதி அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும். தனியார் விண்ணப்பதாரிகளுக்கு தபால் மூலம் – பரீட்சை அனுமதி அட்டைகள் அனுப்பிவைக்கப்படவுள்ளன.

மேலும்...
நடைபெற்றுக் கொண்டிருக்கும் உயர்தரப் பரீட்சையின் வினாத்தாள் ஒன்று ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு

நடைபெற்றுக் கொண்டிருக்கும் உயர்தரப் பரீட்சையின் வினாத்தாள் ஒன்று ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு 0

🕔12.Jan 2024

தற்போது நடைபெற்று வரும் க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான பாடத்தின் இரண்டாம் பகுதியானது, மூன்று மொழிகளிலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது. புதன்கிழமை (ஜனவரி 10) வெளியிடப்பட்ட மேற்படி வினாத்தாள், பரீட்சைக்கு முன்னதாக சமூக ஊடகங்களில் கசிந்ததாக சந்தேகம் எழுந்ததால், குறித்த வினாத்தாளை ரத்துச் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம்

மேலும்...
உயர்தரப் பரீட்சை நாளை ஆரம்பம்: 03 லட்சத்து 46 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தோற்றுகின்றனர்

உயர்தரப் பரீட்சை நாளை ஆரம்பம்: 03 லட்சத்து 46 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தோற்றுகின்றனர் 0

🕔3.Jan 2024

2023ஆம் ஆண்டுக்குரிய க.பொ.த உயர்தர பரீட்சை நாளை ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி, இம்மாதம் 31 ஆம் திகதி வரை பரீட்சை நடைபெறும். 2,302 பரீட்சை நிலையங்களில் நடைபெறும் இந்தப் பரீட்சைக்கு மொத்தம் 346,976 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர். அதேவேளையில் 319 ஒருங்கிணைப்பு மையங்கள் பரீட்சைக்கு உதவும். உயிரியல் பாடத்துக்கு 58,981 பேரும், இயற்பியல்

மேலும்...
கிராம உத்தியோகத்தர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான பரீட்சைக் காலம் அறிவிப்பு

கிராம உத்தியோகத்தர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான பரீட்சைக் காலம் அறிவிப்பு 0

🕔8.Nov 2023

கிராம உத்தியோகத்தர்கள்களுக்குரிய 2,763 வெற்றிடங்களை நிரப்புவதற்கான பரீட்சை 2023 டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெறவுள்ளது. பிரதமர் தினேஷ் குணவர்த்தன இன்று (08) நாடாளுமன்றில் இதனைக் கூறினார். இதுதொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்; “இலங்கையில் 14,022 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உள்ளன. ஒரு கிராம அலுவலர் பிரிவுக்கு ஒரு கிராம அதிகாரி வீதம் 14,022 பதவிகள் உள்ளன.

மேலும்...
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு 0

🕔3.Oct 2023

தரம் ஐந்து – புலமைப்பரிசில் பரீட்சை  நடைபெறவுள்ள திகதி குறித்து பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இம்மாதம் 15 ஆம் திகதி நடத்தப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி நாடளாவிய ரீதியில் 2888 நிலையங்களில் பரீட்சை நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது. ஒரு மணித்தியாலத்தைக் கொண்ட வினாப்பத்திரம் – I

மேலும்...
க.பொ.த உயர்தரப் பரீட்சை ஒத்தி வைப்பு: புதிய திகதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும்

க.பொ.த உயர்தரப் பரீட்சை ஒத்தி வைப்பு: புதிய திகதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும் 0

🕔21.Sep 2023

க.பொ.த உயர்தர பரீட்சை பிற்போடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று (21) முன்னர் நாடாளுமன்றத்தில் அறிவித்தார். பரீட்சைக்கான புதிய திகதியினை பரீட்சைகள் திணைக்களம் அடுத்த வாரம் அறிவிக்கும் என அவர் இதன்போது கூறினார். ஏற்கனவே, பரீட்சை ஒத்திவைக்கபடும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஐ.தே.கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்த்தன தகவல் வெளியிட்டிருந்தார். இது தொடர்பான

மேலும்...
ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு 0

🕔15.Jun 2023

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்குரிய திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி ஐந்தாம் தர மாணவர்களுக்கான புலமை பரிசில் பரீட்சை இடம்பெறவுள்ளது. இதற்காக இன்று முதல் எதிர்வரும் ஜுலை மாதம் 06ஆம் திகதி வரை புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கமுடியும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை,

மேலும்...
உயர் தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுக்கு ஆள்சேர்த்தல்: மே 02 வரை விண்ணப்பிக்கலாம்

உயர் தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுக்கு ஆள்சேர்த்தல்: மே 02 வரை விண்ணப்பிக்கலாம் 0

🕔27.Apr 2023

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் 12 பாடங்களுக்கான விடைத்தாள்களை மதிப்பீட்டுக்கான ஆள்சேர்ப்பு விண்ணப்பங்களை மீண்டும் கோருவதற்கு பரீட்சைத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இயற்பியல், வேதியியல், இணைந்த கணிதம், விவசாயம், உயிரியல், தொடர்பாடல் மற்றும் ஊடகக் கற்கைகள், வணிகக் கற்கைகள், பொறியியல் தொழில்நுட்பம், உயிரியல் தொழில்நுட்பம், தொழில்நுட்பம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கான விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்காகவே விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக

மேலும்...
சாதாரண தரப் பரீட்சை; 55 கொவிட் தொற்றாளர்கள் எழுதுகின்றனர்: ஆணையாளர் தெரிவிப்பு

சாதாரண தரப் பரீட்சை; 55 கொவிட் தொற்றாளர்கள் எழுதுகின்றனர்: ஆணையாளர் தெரிவிப்பு 0

🕔5.Mar 2021

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் கொவிட் தொற்றிய 55 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர் என, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். இவர்களுக்கு சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கூறியுள்ளார். பரீட்சை மோசடிகளையும், குழறுபடிகளையும் தவிர்க்கும் வகையில் சகல பரீட்சை நிலையங்களையும் உள்ளடக்கும் வகையிலான விசேட மேற்பார்வை வேலைத்திட்டம் அமுலாவதாகவும் அவர்

மேலும்...
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம் 0

🕔1.Mar 2021

கொவிட் தொற்று காரணமாக பிற்போடப்பட்டிருந்த 2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகிறது. அதன்படி, பரீட்சைக்கு தோற்றவுள்ள அனைத்து மாணவர்களும் இன்று காலை 7:45 மணிக்கு பரீட்சை மத்திய நிலையங்களுக்கு வருமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்தார். நான்காயிரத்து 513 பரீட்சை மத்திய நிலையங்களில் ஆரம்பமாகும் சாதாரண

மேலும்...
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் இன்று மாலை வெளியாகும்

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் இன்று மாலை வெளியாகும் 0

🕔27.Apr 2020

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு தோற்றியவர்களின் பெறுபேறுகள் இன்று திங்கட்கிழமை மாலை வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார். கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை கடந்த வருடம் டிசம்பர் மாதம் இரண்டாம் திகதி முதல் 12ஆம் திகதி வரை 4987 மத்திய நிலையங்களில் இடம்பெற்றது.

மேலும்...
சகல பரீட்சைகளும் பிற்போடப்பட்டன: கொரோனாவினால் 21 பேர் பாதிப்பு

சகல பரீட்சைகளும் பிற்போடப்பட்டன: கொரோனாவினால் 21 பேர் பாதிப்பு 0

🕔16.Mar 2020

மார்ச் மாதம் நடைபெறவிருந்த சகல பரீட்சைகளும் திகதி அறிவிப்பின்றி பிற்போடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் உள்ள சகல பாடசாலைகளுக்கும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதோடு திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. அத்துடன் பொது விழாக்கள் மற்றும் ஒன்றுகூடல்களுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான பரீட்சைகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

மேலும்...
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் தேசிய ரீதியாக, பெண் பிள்ளைகள் சாதனை

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் தேசிய ரீதியாக, பெண் பிள்ளைகள் சாதனை 0

🕔29.Mar 2019

கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், கொழும்பு விஷாகா மகளிர் கல்லூரி மாணவி நிலன்கா திசிவரி வருஷவித்தான என்பவர், அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார். பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் க.பொ.த. சாதாரண தர பரீட்சை முடிவுகள் நேற்று வியாழக்கிழமை இரவு வௌியாகின இம்முறை கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் நாடளாவிய ரீதியில்

மேலும்...
உயர்தரப் பரீட்சை பெறுபேறு: அனைத்து பிரிவுகளிலும் சிங்கள மாணவர்களே நாடளாவிய ரீதியில் முன்னிலை

உயர்தரப் பரீட்சை பெறுபேறு: அனைத்து பிரிவுகளிலும் சிங்கள மாணவர்களே நாடளாவிய ரீதியில் முன்னிலை 0

🕔30.Dec 2018

க.பொ.த. உயர்தரப் பரீட்சை முடிவுகள் நேற்று இரவு இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட நிலையில், 167,907  மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கான நுழைவுத் தகுதியைப் பெற்றுள்ளனர் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வருடம் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு மொத்தமாக 321,469 பேர் தோற்றியிருந்தனர். இதேவேளை, பல்வேறு வகையான முறைகேடுகளில் ஈடுபட்ட 119 பேரின் பரீட்சைப் பெறுபேறுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

மேலும்...
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின; 205 பேரின் முடிவுகள் இடைநிறுத்தம்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின; 205 பேரின் முடிவுகள் இடைநிறுத்தம் 0

🕔28.Dec 2017

க.பொ.த. உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள், நேற்று புதன்கிழமை இரவு பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளன. இதற்கு அமைய 1,63,104 பேர் பல்கலைக்கழகம் செல்லும் தகுதியைப் பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் 205 மாணவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. பரீட்சையின் போது முறைகேடுகளில் ஈடுபட்டார்கள் எனும் குற்றச்சாட்டின் அடிப்படையில், இவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. பரீட்சைப்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்