ஐ.தே. கட்சியின் தவிசாளர் பதவியிலிருந்து, மலிக் சமரவிக்ரம ராஜிநாமா

🕔 April 8, 2018

மைச்சர் மலிக் சமரவிக்ரம, ஐக்கிய தேசியக் கட்சியில் தான் வகிக்கும் தவிசாளர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

இது குறித்த கடிதத்தை கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் அவர் கையளித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் மறுசீரமைப்புகளை மேற்கொள்ளும் பொருட்டு, அந்தக் கட்சியின் செயலாளர் கபீர் ஹாசிமும், கடந்த வியாழக்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்திருந்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியில் மாற்றங்களை மேற்கொள்வதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு முடிவு செய்துள்ள நிலையில்,  ஏனைய உயர் பதவிகளில் மாற்றங்களை மேற்கொள்வதற்கு அந்தக் கட்சி தீர்மானித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்