முன்னாள் எம்.பி உத்திகவின் வீடு மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு, திட்டமிடப்பட்ட நாடகம்; உதவிய பொலிஸ் அதிகாரி வெளிநாட்டுக்கு தப்பியோட்டம் 0
அனுராதபுரத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன மீது கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம், அவரே திட்டமிட்டு நடத்தியதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. பிரேமரத்னவின் வீட்டுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரின் வாகனத்தின் மீது, காரில் வந்த இனந்தெரியாத குழுவினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம்