900 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய போதைப் பொருள் கைப்பற்றல்
யுக்திய நடவடிக்கையின் போது 9,000 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இதன்போது, பாடசாலைகளில் இடம்பெறும் போதைப்பொருள் விற்பனைகளை தடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பிலும் அவர் விளக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
போதைப் பொருள் செயற்பாடுகளுக்கு எதிராக யுக்திய எனும் பெயரில் சிறப்பு நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது,