பிராயச்சித்தம் தேட முடியாத அநியாயத்தை நிறுத்துங்கள்: ஜனாஸா எரிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு, றிசாட் கோரிக்கை 0
கொவிட் தொற்று காரணமாக உயிரிழப்போரின் சடலங்களை பலாத்காரமாக தகனம் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று செவ்வாய்கிழமை பிற்பகல் கொழும்பு – காலிமுகத் திடலில் மாபெரும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. பாகிஸ்தான் பிரதமர் இலங்கைக்கு வருகை தருவதற்கு சற்று நேரத்துக்கு முன்னர் இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது. மேற்படி விடயத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டே,