ரஞ்சன் ராமநாயக்க தொடர்பில், எதிரணி உறுப்பினர்கள் நாடாளுமன்றில் ஆர்ப்பாட்டம்

🕔 February 23, 2021

சிறை வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தொடர்பில் இன்று செவ்வாய்கிழமை எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையில் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

ரஞ்சன் ராமநாயக்கவை சபை அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்குமாறு சபாநாயகர் அறிவுறத்தல் வழங்க வேண்டுமெனக் கோரி, எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு, இன்று நாடாளுமன்ற சபை அமர்வின் இடையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, இது தொடர்பில் விடுத்து வரும் கோரிக்கையை, சபாநாயகர் தொடர்ந்தும் புறக்கணித்து வருவதாக, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

நீதித்துறை அவமதிப்பு குற்றச்சாட்டின் பேரில், நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 04 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்