இலங்கை வந்தார் இம்ரான்

🕔 February 23, 2021

ரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கையை வந்தடைந்துள்ளார்.

இன்று பிற்பகல் 04 மணியளவில் பாகிஸ்தான் விமானப் படைக்கு சொந்தமான விமானத்தில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

அவரை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக வரவேற்றார்.

இதன்போது அவருக்கு ராணுவ மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டது.

பாகிஸ்தான் வெளியுறவுகள் அமைச்சர் மக்தூம் ஷா மெஹ்மூத் குரேஷி, பிரதமரின் வணிக ஆலோசகர் அப்துல் ரசாக் தாவூத், வெளிவிவகார செயலாளர் சொஹைல் மெஹ்மூத் மற்றும் பாகிஸ்தான் அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும் இலங்கைக்கான விஜயத்தில் இணைந்துள்ளனர்.

இந்த விஜயத்தின் போது பரஸ்பர நன்மை பயக்கும் இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலும் கைச்சாத்திடப்படவுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்