சொற்களின் போர் 0
‘விவாதம் என்பது குரோதத்தினை வளர்த்து விடும்’ என்பார்கள். இன்னொருபுறம், ‘விவாதிக்கும் போதுதான் தெளிவு பிறக்கும்’ என்றும் கூறுவார்கள். ஒவ்வொரு செயற்பாட்டுக்கும் நேர், எதிர் விளைவுகள் இருக்கவே செய்கின்றன. விவாதம் புரிவதனால் ஏற்படும் எதிர் விளைவுகளை நினைத்து ஒதுங்கிப் போகின்றவர்களும் உள்ளனர். மறுபக்கம், ‘கூதலுக்குப் பயந்து குளிக்காமல் இருந்து விட முடியாது’ என்று சொல்லி, களத்தில் குதிப்போரும்