Back to homepage

மேல் மாகாணம்

பொலித்தீன் தடை காரணமாக, சோற்றுப் பார்சலின் விலை அதிகரிப்பு

பொலித்தீன் தடை காரணமாக, சோற்றுப் பார்சலின் விலை அதிகரிப்பு 0

🕔1.Sep 2017

சோற்றுப் பார்சலுக்கான விலை, நாளை சனிக்கிழமையிலிருந்து, 10 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. அகில இலங்கை சிற்றுண்டிசாலை உரிமையாளர்கள் சங்கம், இந்த தீர்மானத்தினை மேற்கொண்டுள்ளது. 20 மைக்ரோன் தடிப்பம் கொண்ட பொலித்தீன்களை பாவிப்பதற்கான தடை, இன்று முதல் அமுலுக்கு வந்தமையினை அடுத்து, இந்த விலை அதிகரிப்புக்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேற்படி பொலித்தீன் தடை காரணமாக, லன்ச் சீட் பயன்படுத்த

மேலும்...
பார்க்கும் இடமெல்லாம் நல்லாட்சியாளரின் கட்டவுட்; புதிய அரசியல் கலாசாரம் எங்கே: நாமல் ராஜபக்ஷ கேள்வி

பார்க்கும் இடமெல்லாம் நல்லாட்சியாளரின் கட்டவுட்; புதிய அரசியல் கலாசாரம் எங்கே: நாமல் ராஜபக்ஷ கேள்வி 0

🕔1.Sep 2017

ஊருக்கு தான் உபதேசம் எனக்கு இல்லை’ என்ற அடிப்படையிலே நல்லாட்சி அரசங்கத்தின் அனைத்துசெயல்பாடுகளும் அமைந்துள்ளதாக அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்ஷ குறிப்பிட்டார். ஊடகங்களுக்கு நேற்று வியாழக்கிழமை கருத்து வெளியிடும் போது அவர் இதனைக் கூறினார். மேலும் அவர் கூறுகையில்; “நாட்டில் ஊழல் அற்ற புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்க வந்ததாகக் கூறிய நல்லாட்சி அரசாங்கத்தின்

மேலும்...
பொலித்தீன் பாவனைக்கு இன்று முதல் தடை

பொலித்தீன் பாவனைக்கு இன்று முதல் தடை 0

🕔1.Sep 2017

இருபது மைக்ரோன் அல்லது அவற்றுக்குக் குறைவான அளவினையுடைய பொலித்தீன் பாவனைக்கு இன்று முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, பொலித்தீன் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கும் வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனை காரணமாக சூழலுக்கு ஏற்படும் தீங்கினை குறைக்கும் பொருட்டு, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்

மேலும்...
இன்ரநெட் டேட்டா மீதான 10 வீத வரி, இன்று முதல் நீக்கம்

இன்ரநெட் டேட்டா மீதான 10 வீத வரி, இன்று முதல் நீக்கம் 0

🕔1.Sep 2017

இன்ரநெட் டேட்டா  மீது விதிக்கப்பட்டிருந்த 10 வீத வரி இன்று செப்டம்பர் முதலாம் திகதி முதல் நீக்கப்படுகிறது. நிதியமைச்சு கடந்த மாதம் அறிவித்தமைக்கு அமைய இந்த வரி நீக்கம் மேற்கொள்ளப்படுகிறது. அதேவேளை, இன்டநெட் டேட்டா 10 வீதமாக அதிகரித்து வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. நிதியமைச்சராகப் பதவி வகித்த ரவி கருணாநாயக்க ராஜநாமா செய்தமையினை அடுத்து, அந்தப் பதவியினைப்

மேலும்...
இறுகும் மஹிந்த அணி; 25 நாடுகளில் கறுப்புப் பணம்: விசாரணைகள் ஆரம்பம்

இறுகும் மஹிந்த அணி; 25 நாடுகளில் கறுப்புப் பணம்: விசாரணைகள் ஆரம்பம் 0

🕔31.Aug 2017

– எம்.ஐ. முபாறக் – மத்திய வங்கி பினைமுறி ஊழலில் சிக்கி, ரவி கருணாநாயக்க அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்தமையைத் தொடர்ந்து, ஐக்கிய தேசிய கட்சி மீது திருட்டுப் பட்டம் சூட்டப்பட்டது. மஹிந்தவின் திருடர்களை பிடிப்பதற்கான நடவடிக்கையை பிரதமர் துரிதப்படுத்தாமைதான் இதற்குக் காரணமாகும். ரவியின் பதவி விலகலைத் தொடர்ந்து பிரதமரைச் சந்தித்த ஐ.தே.க எம்பிக்கள், கட்சிக்கு ஏற்பட்டியிருக்கும்

மேலும்...
ஜனாதிபதியின் சொந்த மாவட்டத்துக்கு, சு.கட்சி அமைப்பாளர்களாக, முஸ்லிம்கள் இருவர் நியமனம்

ஜனாதிபதியின் சொந்த மாவட்டத்துக்கு, சு.கட்சி அமைப்பாளர்களாக, முஸ்லிம்கள் இருவர் நியமனம் 0

🕔31.Aug 2017

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சொந்த மாவட்டமான பொலநறுவையிலுள்ள இரண்டு தேர்தல் தொகுதிகளுக்கு, ஸ்ரீலாங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களாக முஸ்லிம்கள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர். பொலநறுவை தேர்தல் தொகுதியின் முஸ்லிம் பிரதேசங்களுக்கான அமைப்பாளராக பக்கீர் முகைதீன் சாஹுல் ஹமீத் என்பரும், மெதிரிகிரிய தேர்தல் தொகுதியின் முஸ்லிம் பிரதேசங்களுக்கான அமைப்பாளராக முஸ்தபா நசுறுதீன் என்பவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நியமனக் கடிதங்களை,

மேலும்...
மியன்மார் முஸ்லிம்களுக்கு நீதியினைப் பெற்றுக் கொடுக்குமாறு, ஐ.நா. பிரதிநிதியிடம் அமைச்சர் ஹிஸ்புல்லா வலியுறுத்தல்

மியன்மார் முஸ்லிம்களுக்கு நீதியினைப் பெற்றுக் கொடுக்குமாறு, ஐ.நா. பிரதிநிதியிடம் அமைச்சர் ஹிஸ்புல்லா வலியுறுத்தல் 0

🕔31.Aug 2017

– ஆர். ஹஸன் –   மியன்மாரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது மியன்மார் அரச படையினர் மற்றும் பௌத்த தேசியவாத அமைப்புக்கள் மேற்கொண்டு வருகின்ற வன்செயல்களை உடனடியாக தடுத்து நிறுத்தி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமான தீர்வினைப் பெற்றுக்கொடுக்க ஐக்கிய நாடுகள் சபை முன்வர வேண்டும் என்று ஐ.நா. சபையிடம் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர்

மேலும்...
ஜனாதிபதிக்கும் 20ஆவது திருத்தச் சட்ட மூலம் தொடர்பில் அதிருப்திகள் உள்ளன: மேல் மாகாண முதலமைச்சர்

ஜனாதிபதிக்கும் 20ஆவது திருத்தச் சட்ட மூலம் தொடர்பில் அதிருப்திகள் உள்ளன: மேல் மாகாண முதலமைச்சர் 0

🕔30.Aug 2017

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட மூலத்திலுள்ள சில உட்பிரிவுகள் தொடர்பில் ஜனாதிபதியும் உடன்பாடற்றவராக உள்ளார் என்று, மேல் மாகாண  முதலமைச்சர் இசுரு தேவபிரிய இன்று புதன்கிழமை தெரிவித்துள்ளார். எதிர்வரும் திங்கட்கிழமை மாகாணசபை அமர்வில் 20ஆவது திருத்தச் சட்ட மூலம் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னதாக, அதில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு அறிவிப்பதாக,

மேலும்...
மஹிந்தவை சு.க. தலைவராக நியமிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு; எதிர்ப்பினை சமர்ப்பிக்க கால அவகாசம்

மஹிந்தவை சு.க. தலைவராக நியமிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு; எதிர்ப்பினை சமர்ப்பிக்க கால அவகாசம் 0

🕔30.Aug 2017

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் நியமிக்குமாறு கோரித் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், மனுதாரர் மற்றும் பிரதிவாதிகள் தரப்பின் எழுத்துமூல எதிர்ப்புக்களை செப்டெம்பர் 04ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு, கொழும்பு மாவட்ட நீதிபதி சுஜீவ நிசங்க நேற்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டார். எழுத்துமூல எதிர்பை நேற்றைய தினமே சமர்ப்பிக்குமாறு, உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், தமக்குக்

மேலும்...
மியன்மார் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்; ஐ.நா. சபையின் மனித உரிமை ஆணைக்குழுவுக்கு அமைச்சர் றிசாட் கடிதம்

மியன்மார் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்; ஐ.நா. சபையின் மனித உரிமை ஆணைக்குழுவுக்கு அமைச்சர் றிசாட் கடிதம் 0

🕔30.Aug 2017

மியன்மாரிலுள்ள ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது அந்த நாட்டு ராணுவம் நடத்திவரும் காட்டுமிராண்டித்தனமான, எல்லைமீறிய வன்முறைகளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் வன்மையாக கண்டித்துள்ளார். மியன்மார் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும், திட்டமிட்ட இனச்சுத்திகரிப்பை சர்வதேச சமூகமும், ஐ.நாடுகள் சபையும் கண்டும் காணாததுபோல் இருப்பது வேதனையானது  எனவும் அமைச்சர் கூறியுள்ளார். இதேவேளை, மியன்மார் வன்முறைகள்

மேலும்...
அஸ்வர் ஹாஜியாரின் ஜனாஸா நல்லடக்கம், இன்று மாலை தெஹிவளையில் இடம்பெறும்

அஸ்வர் ஹாஜியாரின் ஜனாஸா நல்லடக்கம், இன்று மாலை தெஹிவளையில் இடம்பெறும் 0

🕔30.Aug 2017

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர் ஹாஜியாரின் ஜனாஸா நல்லடக்கம், இன்று புதன்கிழமை மாலை தெஹிவளை பெரிய பள்ளிவாசலில் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முஸ்லிம் சமய விவகார ராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர், நேற்று இரவு 7.15 மணியளவில் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் காலமானார். நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர், லங்கா சமசமாஜக் கட்சி மூலம் அரசியலுக்குள் பிரவேசித்து, பின்பு ஐ.தே.க.

மேலும்...
முன்னாள் அமைச்சர் அஸ்வர் ஹாஜியார் காலமானார்

முன்னாள் அமைச்சர் அஸ்வர் ஹாஜியார் காலமானார் 0

🕔29.Aug 2017

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர் இன்று செவ்வாய்கிழமை இரவு, தனது 80ஆவது வயதில் காலமானார். சுகயீனம் காரணமாக, கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்தார். எல்லோராலும் ‘அஸ்வர் ஹாஜியார்’ என்று அழைக்கப்படும் இவர், அரசியலுக்குள் வருவதற்கு முன்னர் ஊடகவியலாளராகவும், ஆசிரியராகவும் பணியாற்றியிருந்தார். 1950ஆம் ஆண்டு ஐ.தே.கட்சி மூலம் அரசியலுக்குள் நுழைந்த அஸ்வர் ஹாஜியார்,

மேலும்...
மாணவரை சேர்க்க லஞ்சம் பெற்ற அதிபருக்கு, 08 ஆண்டுகள் சிறைத் தண்டனை

மாணவரை சேர்க்க லஞ்சம் பெற்ற அதிபருக்கு, 08 ஆண்டுகள் சிறைத் தண்டனை 0

🕔29.Aug 2017

மாணவர் ஒருவரை தரம் ஒன்றுக்கு வகுப்புக்கு சேர்த்துக் கொள்ளும் பொருட்டு, லஞ்சம் பெற்ற முன்னாள் அதிபர் ஒருவருக்கு 08 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றம், இன்று செவ்வாய்கிழமை மேற்படி தண்டனையினை விதித்து தீர்ப்பளித்தது. பாணந்துறையிலுள்ள பாடசாலையொன்றில் தரம் ஒன்றுக்கு புதிதாக மாணவர் ஒருவரை இணைத்துக் கொள்வதற்காக, குறித்த அதிபர் 25,000 ரூபா பணத்தை

மேலும்...
இந்தியாவிலிருந்து 01 லட்சம் மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி; தட்டுப்பாடு ஓரளவு நீக்கப்படும்

இந்தியாவிலிருந்து 01 லட்சம் மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி; தட்டுப்பாடு ஓரளவு நீக்கப்படும் 0

🕔29.Aug 2017

இந்தியாவிலிருந்து அடுத்தமாதம் செப்டம்பர் நடுப்பகுதியில் 70ஆயிரம் மெற்றிக்தொன் நாட்டரிசியும், அதன் பின்னர் 30ஆயிரம் மெற்றிக்தொன் சம்பாவும் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக கைத்தொழில் அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். 70ஆயிரம் மெற்றிக்தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் அரசாங்கத்துக்கும், இந்திய தனியார் துறையினருக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும், ஒரு மெற்றிக்தொன் அரிசியை  445டொலருக்கு இந்திய தனியார்துறையினர் வழங்குவதாகவும் அவர்

மேலும்...
பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி மீது, மரம் முறிந்து வீழ்ந்தது; உள்ளேயிருந்த ஆசிரியை ஸ்தலத்தில் பலி

பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி மீது, மரம் முறிந்து வீழ்ந்தது; உள்ளேயிருந்த ஆசிரியை ஸ்தலத்தில் பலி 0

🕔29.Aug 2017

– க. கிஷாந்தன் – பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியொன்றில் மரம் முறிந்து வீழ்ந்தமையினால் ஏற்பட்ட விபத்தில், ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளார். தலவாக்கலை பொலிஸ் பிரிவிரிற்குட்பட்ட அட்டன் – தலவாக்கலை பிரதான வீதியில் டெவோன் பகுதியில், இன்று செவ்வாய்கிழமை மதியம்  இந்த விபத்து நிகழ்ந்தது. கொட்டகலை பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு சென்ற முச்சக்கரவண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்