அஸ்வர் ஹாஜியாரின் ஜனாஸா நல்லடக்கம், இன்று மாலை தெஹிவளையில் இடம்பெறும்

🕔 August 30, 2017

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர் ஹாஜியாரின் ஜனாஸா நல்லடக்கம், இன்று புதன்கிழமை மாலை தெஹிவளை பெரிய பள்ளிவாசலில் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முஸ்லிம் சமய விவகார ராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர், நேற்று இரவு 7.15 மணியளவில் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் காலமானார்.

நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர், லங்கா சமசமாஜக் கட்சி மூலம் அரசியலுக்குள் பிரவேசித்து, பின்பு ஐ.தே.க. மூலம் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரானார். பின்னர், முஸ்லிம் சமய விவகார ராஜாங்க அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற விவகார ராஜாங்க அமைச்சர் பதவிகளை வகித்தார்.

ஆசிரியராக மட்டுமல்லாது மஹரம தினகரன் பத்திரிகையின் செய்தியாளராகவும் தனது பொது வாழ்வை ஆரம்பித்த இவர், கலாநிதி ரீ.பி. ஜாயா,  டொக்டர் எம்.சீ.எம். கலீல், எம்.எச். முஹம்மத், எம்.ஏ. பாக்கிர் மாக்கார் உட்பட பல முஸ்லிம் தலைவர்களோடு  நெருங்கி செயற்பட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்