நாடாளுமன்றத்தில் நேற்று ஏற்பட்ட குழப்பம், அரசாங்கம் திட்டமிட்டு செய்தது: கபே குற்றச்சாட்டு 0
நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்கிழமை ஏற்பட்ட குழப்பகரமான சூழ்நிலையினை, அரசாங்கம் திட்டமிட்டு உருவாக்கியதாக, கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் குற்றம்சாட்டியுள்ளார். பிணை முறி மோசடி தொடர்பான விவாதத்தினை திசை திருப்புவதற்காகவே, அரசாங்கம் இதனைச் செய்ததாகவும் அவர் தெரிவித்தார். “பிணை முறி மோசடி தொடர்பில் பொறுப்பேற்க வேண்டிய பிரதான குற்றவாளி யார் என்பதை அரசாங்கம் அறிந்துள்ளது.