நீதித்துறையில் மீண்டும் நம்பிக்கை இழப்பு; ஊழல் எதிர்ப்பு முன்னணி தெரிவிப்பு 0
இலங்கையின் நீதித்துறை மீதான நம்பிக்கை மீண்டும் இழக்கப்பட்டுள்ளதாக ஊழல் எதிர்ப்பு முன்னணி தெரிவித்துள்ளது. அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமாக யானைக் குட்டியொன்றை தன்வசம் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்த கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகேவிற்கு பிணை வழங்கப்பட்ட முறை தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ள நிலையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சர்வதேச ரீதியாக இலங்கை அழுத்தங்களுக்கு முகங்கொடுக்க நேரிடும்