மாணவர் சேர்ப்பு, பட்டமளிப்பு ஆகியவற்றை நிறுத்துமாறு, சைட்டம் மருத்துவ கல்லூரிக்கு அரசாங்கம் உத்தரவு 0
சைட்டம் எனப்படும் தனியார் மருத்துவ கல்லூரிக்கு மாணவர்களைச் சேர்ந்துக் கொள்ளும் நடவடிக்கையினை இடைநிறுத்துமாறு அரசாங்கம் இன்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது. இவேளை, மாணவர்களுக்கு பட்டம் வழங்குவதையும் இடை நிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரிகள் தொடர்பிலான நிபந்தனை, வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடும் வரை, மேற்படி விடயங்களை இடை நிறுத்துமாறு, ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.