மாணவர் சேர்ப்பு, பட்டமளிப்பு ஆகியவற்றை நிறுத்துமாறு, சைட்டம் மருத்துவ கல்லூரிக்கு அரசாங்கம் உத்தரவு

மாணவர் சேர்ப்பு, பட்டமளிப்பு ஆகியவற்றை நிறுத்துமாறு, சைட்டம் மருத்துவ கல்லூரிக்கு அரசாங்கம் உத்தரவு 0

🕔25.Jun 2017

சைட்டம் எனப்படும் தனியார் மருத்துவ கல்லூரிக்கு மாணவர்களைச் சேர்ந்துக் கொள்ளும் நடவடிக்கையினை இடைநிறுத்துமாறு அரசாங்கம் இன்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது. இவேளை, மாணவர்களுக்கு பட்டம் வழங்குவதையும் இடை நிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரிகள் தொடர்பிலான நிபந்தனை, வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடும் வரை, மேற்படி விடயங்களை இடை நிறுத்துமாறு, ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

மேலும்...
பெற்றோல் டேங்கர் விபத்தில் ஏற்பட்ட தீயில் கருகி, 140 பேர் பலி: பாகிஸ்தானில் சோகம்

பெற்றோல் டேங்கர் விபத்தில் ஏற்பட்ட தீயில் கருகி, 140 பேர் பலி: பாகிஸ்தானில் சோகம் 0

🕔25.Jun 2017

பெற்றோல் ஏற்றிக் கொண்டு பயணித்த டேங்கர் புரண்டு விபத்துக்குள்ளான போது ஏற்பட்ட தீயில் சிக்கி, ஆகக்குறைந்தது 140 பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்து பாகிஸ்தானில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்றது. குறித்த டேங்கர், கராச்சியிலிருந்து லாஹுருக்கு செல்லும் வழியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. டேங்கர் புரண்டபோது, அதிலிருந்து வெளியேறிய பெற்றோலை சேகரிப்பதற்காக கூடியவர்களே

மேலும்...
செப்டம்பரில் தேர்தல்; பிரசன்ன தலைமையிலான குழுவிடம், அமைச்சர் பைசர் முஸ்தபா வாக்குறுதி

செப்டம்பரில் தேர்தல்; பிரசன்ன தலைமையிலான குழுவிடம், அமைச்சர் பைசர் முஸ்தபா வாக்குறுதி 0

🕔25.Jun 2017

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடத்துவதாக, உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தம்மிடம் உத்தரவாதம் வழங்கியதாக ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளுராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர்களைக் கொண்ட குழுவினர், நாடாளுமன்ற உறுப்பினர்

மேலும்...
லொத்தர் சபையைக் கட்டுப்படுத்தும் அதிகாரம், சட்டப்படி ரவிக்கு கிடையாது: அனுர குமார திஸாநாயக

லொத்தர் சபையைக் கட்டுப்படுத்தும் அதிகாரம், சட்டப்படி ரவிக்கு கிடையாது: அனுர குமார திஸாநாயக 0

🕔25.Jun 2017

லொத்தர் சபை உத்தியோகத்தர்களுக்கு உத்தரவு வழங்கும் அதிகாரம், அச் சபையின் சட்டத்தின்படி, வெளி விவகார அமைச்சர் ரவி கருணாநாயகவுக்குக் கிடையாது என, எதிர்க்கட்சி பிரதம கொரடாவும், ஜே.வி.பி. தலைவருமான அனுர குமார திஸாநாயக, நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். லொத்தர் சபை சட்டத்தின் படி, நிதியமைச்சர்தான் அதற்குப் பொறுப்பான அமைச்சராவார் எனவும் அவர்  இதன்போது கூறினார். மேலும், லொத்தர் சபையையின்

மேலும்...
உதய கம்மன்பில ஓர் உளவாளி: ஜாதிக ஹெல உறுமய தேசிய அமைப்பாளர் குற்றச்சாட்டு

உதய கம்மன்பில ஓர் உளவாளி: ஜாதிக ஹெல உறுமய தேசிய அமைப்பாளர் குற்றச்சாட்டு 0

🕔25.Jun 2017

பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில, ஜாதிக ஹெல உறுமயவில் அங்கம் வகித்த காலப் பகுதியில், மஹிந்த ராஜபக்ஷவின் உளவாளியாகச் செயற்பட்டார் என்று, ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளர் நிஷாந்த சிறி வர்ணசிங்க குற்றம்சாட்டியுள்ளார். ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக்

மேலும்...
யானை தாக்கி குடும்பஸ்தர் பலி; பொத்துவிலில் சம்பவம்

யானை தாக்கி குடும்பஸ்தர் பலி; பொத்துவிலில் சம்பவம் 0

🕔25.Jun 2017

– கலீபா – குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த காட்டு யானையை விரட்டச்சென்ற விவசாயி, அதே யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் பொத்துவில் பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. பொத்துவில் – 27, ரசாக் மௌலானா நகரைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை முகைதீன் பாவா இப்றாஹீம் (வயது 42) எனும் விவசாயியே இவ்வாறு, உயிரிழந்தார்.

மேலும்...
அக்கரைப்பற்று இளைஞர் கழக சம்மேளனத்தின் இப்தார் நிகழ்வு; நஸார் ஹாஜி பிரதம விருந்தினர்

அக்கரைப்பற்று இளைஞர் கழக சம்மேளனத்தின் இப்தார் நிகழ்வு; நஸார் ஹாஜி பிரதம விருந்தினர் 0

🕔24.Jun 2017

-றிசாத் ஏ காதர் –அக்கரைப்பற்று பிரதேச இளைளுர் கழக சம்மேளனத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு,   அக்கரைப்பற்று ரீ. எப்.சி வரவேற்பு விடுதியில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.பிரதேச செயலக இளைளுர் சேவைகள் உத்தியோகத்தர்  எம்.எம். ஹிலாஹி தலைமையில் நடைபெற்ற மேற்படி இப்தார் நிகழ்வில், பிரபல தொழிலதிபர் நஸார் ஹாஜியார் பிரதம விருந்தினாராகக் கலந்துகொண்டார்.உதவி திட்டமிடல் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர், இளைளுர்

மேலும்...
முஸ்லிம்களின் 1.5 பில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள், ஒரு மாதத்தில் நாசம்: அமைச்சர் றிசாட் கவலை

முஸ்லிம்களின் 1.5 பில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள், ஒரு மாதத்தில் நாசம்: அமைச்சர் றிசாட் கவலை 0

🕔24.Jun 2017

– சுஐப் எம் காசிம் –இனவாதச் செயற்பாடுகள் காரணமாக, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான 1.5 பில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் அழிவடைந்துள்ளன என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் கவலை தெரிவித்தார்.மேலும், சதிகாரர்களின் வலைக்குள் சட்டமும் ஒழுங்கும் சிக்கிக் கிடக்கின்றன என்றும் அவர் குற்றம்சாட்டினார்.குருநாகல் கெகுணுகொல்ல சதகா

மேலும்...
ஒலிம்பிக் தின பாதை யாத்திரையை, பிரதியமைச்சர் ஹரீஸ் ஆரம்பித்து வைத்தார்

ஒலிம்பிக் தின பாதை யாத்திரையை, பிரதியமைச்சர் ஹரீஸ் ஆரம்பித்து வைத்தார் 0

🕔24.Jun 2017

– அகமட் எஸ். முகைடீன், ஹாசிப் யாசீன் –ஒலிம்பிக் தினம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும்வகையிலான பாதை யாத்திரையினை, விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் நேற்று வெள்ளிக்கிழமை அம்பாறையில் ஆரம்பித்து ஆரம்பித்து வைத்தார்.இப்பாதை யாத்திரையில் பாடசாலை மாணவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டு அம்பாறை நகரை வலம்வந்து வீரசிங்க பொது மைதானத்தை சென்றடைந்தனர். இதன் பின்னர்

மேலும்...
தெரிந்ததைச் சொல்ல ஏன் தயக்கம்; யாருக்கு அச்சப்படுகிறார் ஹக்கீம்

தெரிந்ததைச் சொல்ல ஏன் தயக்கம்; யாருக்கு அச்சப்படுகிறார் ஹக்கீம் 0

🕔24.Jun 2017

– அ. அஹமட் – “முஸ்லிம்கள் மீது இப்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் தாக்குதல் எங்கிருந்து வருகின்றன என்று எமக்கு தெரியும்” என, அமைச்சர் ஹக்கீம் அண்மையில் கண்டியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போது   கூறியிருந்தார். மேலும், அது, வெளியில் சொல்ல முடியாத அளவு பாரதூரமானது எனவும் கூறியிருந்தார். அமைச்சர் ஹக்கீம் இதனை மிகச் சாதாரணமாக கூறியிருந்தாலும், இது சாதாரண விடயமல்ல. அதற்கு முன்பு இலங்கையில் இடம்பெற்ற

மேலும்...
பொதுபல சேனாவை மைத்திரிதான் பாதுகாக்கின்றார்; காரணம் சொல்லி குற்றம் சாட்டுகின்றார் நாமல்

பொதுபல சேனாவை மைத்திரிதான் பாதுகாக்கின்றார்; காரணம் சொல்லி குற்றம் சாட்டுகின்றார் நாமல் 0

🕔24.Jun 2017

பொது பல சேனா அமைப்பை ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேனாவே பாதுகாப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ குற்றம் சாட்டியுள்ளார்.அவருடைய ஊடகப்பிரிவினூடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;பொது பல சேனா விவகாத்தில் நடந்து கொண்டிருக்கும் விடயங்களை பார்க்கின்ற போது, ஞானசார தேரரின் பின்னால் ஜனாதிபதி மைத்திரி உள்ளார் என்ற அச்சமே மேலோங்கி காணப்படுகிறது.

மேலும்...
இளவரசி டயானாவை நான்தான் கொன்றேன்; மர்ம முடிச்சை அவிழ்த்தார், முன்னாள் உளவாளி

இளவரசி டயானாவை நான்தான் கொன்றேன்; மர்ம முடிச்சை அவிழ்த்தார், முன்னாள் உளவாளி 0

🕔23.Jun 2017

“பிரித்தானியாவின் முன்னாள் இளவரசி டயானாவை நான்தான் கொன்றேன்” என்று, ஜோன் ஹொப்கின்ஸ் என்பவர் தெரிவித்துள்ளார். எம்.ஐ.5 எனும் பிரித்தானிய உளவு நிறுவனத்தின் முன்னாள் பணியாளரான இவர், தனது அதிகாரியின் உத்தரவுக்கிணங்கவே, இளவரசி டயானாவை, தான் கென்றதாகக் கூறியுள்ளார். 80 வயதுடைய ஹொப்கின்ஸ், எம்.ஐ.5 உளவு நிறுவனத்தில் 38 வருடங்கள் பணியாற்றியுள்ளார். 20 வருடங்களாக இளவரசி டயானாவின் மரணம்

மேலும்...
13 நிபந்தனைகளை நிறைவேற்றினால் தடை நீங்கும்; கட்டாருக்கு பட்டியல் சமர்ப்பிப்பு

13 நிபந்தனைகளை நிறைவேற்றினால் தடை நீங்கும்; கட்டாருக்கு பட்டியல் சமர்ப்பிப்பு 0

🕔23.Jun 2017

அல் ஜஸீரா தொலைக்காட்சியை மூடுவது, துருக்கி ராணுவ தளங்களில் ஒன்றை மூடுவது மற்றும் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்புடனான எல்லா தொடர்புகளையும் துண்டிப்பது உள்ளிட்ட 13 நிபந்தனைகளை நிறைவேற்றினால், கட்டார் மீதான தடையினை நீக்குவதாக சஊதி அரேபியா உள்ளிட்ட நான்கு அரபு  நாடுகள் தெரிவித்துள்ளன. கட்டாரிடம் சஊதி உள்ளிட்ட நான்கு நாடுகளும் எதிர்பார்க்கும் விடயங்களைப் பட்டியலிட்டுள்ளன. அந்தப் பட்டிலியலில்தான் மேலுள்ள

மேலும்...
கோமாரிக்கு வீதி விளக்குகள்; பொத்துவில் பிரதேச சபை பொருத்தியது

கோமாரிக்கு வீதி விளக்குகள்; பொத்துவில் பிரதேச சபை பொருத்தியது 0

🕔23.Jun 2017

– கலீபா – நீண்டகாலமாக இருளில் மூழ்கிக்கிடந்த கோமாரிப் பிரதேசத்தின் பிரதான வீதிக்கு, பிரதேச சபையினால் இன்று வெள்ளிக்கிழமை மின் விளக்குகள் பொருத்தப்பட்டன. பொத்துவில் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட கோமாரிப் பிரதேசத்தின் பிரதான வீதி நீண்ட காலமாக இருளில் மூழ்கியிருந்தது. இந்த நிலையில்  பொத்துவில் பிரதேச சபையினர் இன்று முதற்கட்டமாக கோமாரி பிரதான வீதிக்கு ஒரு

மேலும்...
பொலிஸ் பேச்சாளராக ருவன் குணசேகர நியமனம்

பொலிஸ் பேச்சாளராக ருவன் குணசேகர நியமனம் 0

🕔23.Jun 2017

பொலிஸ் ஊடகப் பேச்சாளராக சட்டத்தரணியும், பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர நியமிக்கப்பட்டுள்ளார். பொலிஸ் பேச்சாளராகக் கடமையாற்றிய பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி ராஜிநாமா செய்தமையினை அடுத்து, அந்தப் பதவிக்கு ருவன் குணசேகர நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, பொலிஸ் பேச்சாளராக ருவன் குணசேகர கடமையாற்றியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்